Wednesday, February 1, 2012

உன்னிடம் கேட்பேன் ஒன்று!.....

ஓ தென்றலே! நீ
சொல்லிவிடு! உன்
வசந்தத்தின் வாசத்தை!
ஓ மேகமே! நீ
சொல்லிவிடு உன்
கருங்கூந்தல் ரகசியத்தை!
ஓ நதியே! நீ
சொல்லிவிடு! யாரை
காதலிக்க இப்படி ஓடுகிறாய் என்று!
ஓ மயிலே! நீ
சொல்லிவிடு! யாரை
மயக்க இந்த வண்ணங்கள் என்று?
ஓ மானே! நீ
சொல்லிவிடு! உன் கண்களை
எனக்கு தானமாய் தந்து விடுவாயா என்று!
இந்த ரகசியத்தையெல்லாம் சொன்னால் !
அழகாக்குவேன் உங்களை எல்லாம் விட!
என் காதலியை!!!

No comments:

Post a Comment