Monday, May 30, 2011

சில நேரம் சில நேரம் .........................

சில நேரம் துன்பம் வரும்    
அதை   தகர்த்து எறிந்து  விட வேண்டும்

சில நேரம்  இன்பம்  வரும்     
அதை  இனிதாக  எடுத்துக்கொள்ள  வேண்டும்

சில நேரம் போட்டி வரும்       
அதை முயன்று ஜெயித்திட வேண்டும்

சில நேரம் சில நேரம் .........................
                     வாழ்கையும்   சிலநேரம்

நாடகம் ....

நீ..........
காதலிக்காதது போல் நடிப்பதற்கு
என்.....
காதல் மேடைதானா கிடைத்தது?
உன்.....
கோபமான பார்வைகள்தான்
நீ........
நடித்ததில் பிடித்தது.

இயற்கையை நேசிப்போம் !!!

நிழலுக்கு
நீண்ட வரிசை வரலாம்
ஆக்சிஜனுக்கு
அடிதடி வரலாம் !!!

சூரியன் தன்
சுடும் ஒளியால்
நிலவை உருக்கலாம்
இரவே இல்லாமல் போகலாம் !!!

தங்கத்தையும் விஞ்சி
தண்ணீர் விலை போகலாம் !!!

மழைக்காக மனிதன்
மண்டியிட்டு ஒப்பாரி வைக்கலாம் !!!

உணவில்லாமல் உணர்விழந்து
பாம்பைப் பாம்பு விழுங்குவது போல்
மனிதைனை மனிதனே விழுங்கலாம் !!!

அறிவியலின் அணுகுண்டில்
அகிலமே சிதறலாம் !!!

ஏன் பிறந்தோம் என்ற
எண்ணம் தோன்றலாம் !!!

சூரியனின் சூடு தாங்காமல்
கிரகங்கள் உருகும்
நாள் நெருங்கிவிட்டது
பூமியின் ஆயுள்
பெருமளவு சுருங்கிவிட்டது !!!

அறிவியல் என்னும் ஆயுதத்தால்
இயற்கையை கொன்றதற்கு
இறைவன் பழிவாங்கும் நாள்
பக்கத்தில் வந்து விட்டது !!!

அடுத்து வரும் சந்ததிக்காய்
அறிவியலைக்
கொஞ்சம் புறக்கணிப்போம் !!!

ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்
பூமியை குளிர்விப்போம் !!!

அழுது கொண்டிருக்கும்
இயற்கைத் தாயின் கண்களை
மரமென்னும் விரல் வளர்த்து துடைப்போம் !!!

இனியேனும் யோசிப்போம்
இயற்கையை நேசிப்போம் !!!

Sunday, May 29, 2011

உண்மையான காதல்

தொட்டு விட்டு ஆசை தீரும் காதல்

காதல் அல்ல

தொடாமல் உன்னை தூர நின்று

பார்த்து மகழிச்சி கொள்வதே

உண்மையான காதல்

அவர்களுக்கு என்ன..?

நீ
சென்ற பிறகு
எனக்கு ஏகப்பட்ட கொடுமை...

வந்தவர் போனவர் எல்லாம்

என்
தலையை அடித்து விட்டு
போகிறார்கள்...

நீ
நினைபதாய் இருந்தால்
நான் விக்கி செத்தால் அவர்களுக்கு என்ன..?

என்னுடைய எதிர்கால காதலிக்காய் ................

மூன்று நாள் அவள் வலியை
முடிந்தளவு நான் தாங்க
மூழ்காத நிலைபோதும்
முழுபாரம் நான் சுமக்க
மடிமீது குழந்தையை கூட
மகளென்றால் தோளில் சுமக்க
பொட்டுவைக்க இரத்தம் தந்து
புன்னகையாய் நான் முத்தமிட
முப்பது வயது இடுப்புக்காகவே
மூட்டுக்கு மூட்டு நான் பசையாக
கால்சியமும்* இரும்புச்சத்தும்
கலந்தது போல் நான் காத்திட
நெஞ்சில் வரும் புற்றுநோயயை
நெருங்கிவிடாமல் நான் அழித்திட
நாற்பது வயது அவள் நெருங்கு முன்னரே
நல்லதொரு தோழியாய் நான் அமைந்திட
மெனோபாஸ்* காலத்து ஹார்மோன்* மாற்றத்தை
மிருதுவாய் ஈஸ்டோரோஜனை* ஆண்ட்ரோஜனையாய்* புரிந்திட
என்னுடைய காதலியின் இப்படிப்பட்ட மாற்றத்தையும்
இதனில் கூட அடங்காத இன்னும்பல மாற்றத்தையும்
உள்ளம் மட்டும் மாற்றாமல்
உயிரை மட்டும் மாற்றாமல்
உடலை கூட மாற்றிவிட்டே
உகந்தவளை கைபிடிப்பேன்
உதட்டளவில் சொல்லவில்லை
உண்மை இது உண்மை இது
உலகத்தீரே ஒரு நாள் என் காதலியை
உங்களுக்கு காட்டத்தான் போகின்றேன் !

முத்தம் கூட பாதி சாவு ......

நீ தொலைபேசியில் தந்திடும்
முத்தங்களை கூட விழி
மூடியே வாங்குகிறேன் ....
நீயும் பாதி விழி முடியே
தருவாய் என்று .........
முத்தம் கூட பாதி
சாவு தானே .......

அம்மா....

அன்பென்னும்
வார்த்தைக்குள்
அவதரித்தவள் !


முதன்முதல் இப்பூவலகில்
அடியெடுத்து வைக்க
எனக்கு ஆதரவாய் இருந்தவள் !


இந்த உலகில் அம்மா என அழைக்க என்னை தயாராக்கியவள்!


நான் முதன்முதலாய் அம்மா என அழைக்கையில்

அகில உலகத்தையே வென்று
விட்டான் போல மகிழச்சியடைந்தவள் !


பின் காலம் கடந்து விட்டது
எத்தனையோ மொழிகளையும் வார்த்தைகளையும்
கற்று விட்டேன்.


அத்தனையும் நிகராகவில்லை

அம்மா என்ற ஒரு

வார்த்தைக்கு வார்த்தைக்கு !

உனக்கு தெரியுமா?????

உன் புகைபடத்தையும்..,
என் புகைப்படத்தையும்..
வெட்டி ஜோடியாக ஒட்டி ரசித்தது
உனக்கு தெரியுமா..?

உன் பெயரோடு ..,
என் பெயரை ..,
இணைத்து எழுதி இன்பத்தில் தவழ்ந்தது
உனக்கு தெரியுமா..??

உன் மேலுள்ள காதலினால்..,
என் கையை வெட்டி..,
ரத்தத்தில் கவிதை வடித்தது
உனக்கு தெரியுமா..???

இவை எதுவுமே தெரியாத உனக்கு..
என் காதலின் ஆழம் மட்டும் எங்கே
தெரிய போகிறது..,
என்னை-உணரமுடிந்த உன்னால் தானடா ..,
என் காதலையும் உணர முடியாமல் போனது..,

Saturday, May 28, 2011

!!!உனக்கு ஒரு மடல்!!!

உனக்கு ஒரு மடல் -என்னை
மறந்து விட்டாய் என்பதற்கு அல்ல
உன்னை உள் அன்போடு
நேசித்தேன் என்பதற்காக!

என் காதலுக்கு கருவாகி
கவிதைக்கு பொருளாகி
எனை காதலித்து
கவி தந்த காதலி-நீ
ஆதலால்

என் காதலை
இப்போது ஏற்க மறுத்தாலும்-என்
இதய வானிலே எப்போதும் -நீ
இளைய நிலா என்பதால்!

உன் மீது நான் கொண்ட காதல்
ஏழு ஜென்மத்திலும்
மறவா உன் நினைவுகள் என்பதால்!

காதல் என்பது மாயை-என்ற
புரியாத புதிரை-எனக்கு
புரிய வைத்தாய்
என்பதற்கு அல்ல!

பாசங்கள் எல்லாம் வேசங்கள்
என்ற நிஜத்தை
எனக்கு சொல்லாமல் சொன்னவள் -நீ
என்பதால் இறுதியாக
உனக்கு ஒரு மடல்!

பொறாமை வரும் எனக்கு ...

நீ யாரோடு பேசினாலும்

பொறாமை வரும் எனக்கு

எவ்வளவு நேரம் பேசினாலும்

போதவில்லை என்னும் மனது

காரணம் உன்னை கேட்டால்

என்னை சந்தேக படுகிறாயா என்கிறாய்

உன்மீது உள்ள அக்கறை

உனக்கு சந்தேகமாய்

எனக்கு பாசமாய்

Friday, May 27, 2011

புரிதல் இல்லாத காதல் ....................

பார்த்தோம் பழகினோம்

பிடித்தது நெருங்கினோம்

காதல் முளைத்தது

மகழிச்சி கொண்டோம்

இத்தனை நடந்தும் நமக்குள்

மெலிதாய் ஒரு இடைவெளி உணர்கிறேன்

புரிதலில் உனக்கும் எனக்கும்

சற்று விலகி தான் நிற்கிறது

நீ உயிராய் நினைக்கும் காதல்

முடியும்முன் ஒரு முன்னோட்டம்........

மூச்சுக்கொரு முறை திரும்பிப்பார்த்து,
முகம் சுழித்துக்கொண்டே போனது பள்ளிக்காலங்கள்...

தன்னந்தனியாக தள்ளிவிடப்பட்டேன்,
தடுக்கி விழுந்தது மனது.. முதலும் கடைசியுமாக..

புத்தகம் பேனா பென்சில் போல
புதியதாய் ஒரு வாசத்தில்
முதலும் கடைசியுமாக முளைத்துகொண்டேன்..

காட்சிகளின் பிம்பகளில் கரைபுரண்டு
கைகோர்த்து நடந்த மழைக்காலத்தில்,
முதலும் கடைசியுமாக நனைகிறேன்...

வெறுமனே வீணடித்த பொழுதுகளில்,
"வெள்ளைத்தாள் கூட
வியர்வையின் விடைத்தாள்" என்று
தட்டிகொடுத்த உனது தோள்களில்
முதலும் கடைசியுமாக சாய்ந்துகொள்கிறேன்..


" நான்" என்ற வார்த்தையை திருடியது நீ,
பிரிவு என்னும் சிறைவாசம் மட்டும் எனக்கெப்படி?

அதிசயமான பறவையடா நீ...
ஆயிரம் நாட்கள் அடைகாத்து,
ஆசையாக எனக்கு,
இப்படி ஒரு தனிமையை
ஈவிரக்கமின்றி அனுபவிக்கச்சொல்லி,
உயிரோடு என்னை ஒவ்வொரு கணமும்
ஊசலாட வைக்கிறாய்..
எதற்காக இந்த "பிரிவு"?
ஏதோ ஒரு சத்தம் மட்டும் எனக்குள்
ஐக்கியம் ஆகிவிட்டது.
ஒரெ ஒரு முறை
ஓடிச்சென்று கட்டி அணைத்து
அக்கணமே திரும்பிவிட்டேன்.

வராமல் உன்னிடமே நிற்கிறது
வீணாய்ப்போன மனது..

தன்னந்தனியாக தள்ளிவிடப்பட்டேன் -திரும்பவும்,
தடுக்கி விழவில்லை மனது,
தாங்கிக்கொள்ள நீ இருக்கும் தைரியத்தில்..

இதயம் கூட சில நேரங்களில்,
இடம் மாறலாம் - காதலில்..
அங்கிருக்க ஆசை இல்லை..
ஏய்,
நீ அழுதுவிடாதே..
உருண்டு விழுந்து விடுவேன்..
உனது கண்களில் எப்பொழுதுமே " நான் "

Thursday, May 26, 2011

என் அன்பர்களே!!!

நேசம் இடுங்கள்
நலமாகட்டும் உள்ளங்கள்
பாசம் இடுங்கள்
பந்தமாகட்டும் உணர்வுகள்
அன்பு இடுங்கள்
அவர்கள் மறந்தாலும், மறுத்தாலும்...

எழுதுகோல்...

ஒவ்வொரு முறையுன்
உனைபற்றி எழுதும்போதும்
புதிதாய் காதல் மகுடம் சூட்டி
கொள்கிறது என் எழுதுகோல்...

உன்னை காணாத நேரங்களில்
உன்னோடு பேச விரும்பும்
வார்த்தைகளை எழுதியே
தீர்கிறது கவிதையாய்
என் காதல் எழுதுகோல்....

நான் எழுத நினைக்கும்
வார்தைகளை வரிகளாய்
வடிவமைத்து மௌன
புன்னகைத்து வசைபாடுகிறது
நான் எழுதிய பக்கங்களை விட
கிறுக்கிய பக்கங்கள் அதிகமென்று...

பக்கங்கள் தீர்கிறது என்
எழுதுகோலும் என்னங்கலும்
உன்னை சுற்றிதிரிந்தபடி....
கொஞ்சம் பயமாதான்
உள்ளது இன்னும்
எத்தனை பக்கங்க்ள்
திரபோகிறதோ என்று.....

எழுதிய பக்கங்களில்
சேர்ந்திருக்கும் வரிகள்
நம் காதலின்
நெருக்கதை சொல்கிறது
பிரிந்திருக்கும் வரிகளோ
நம் பிரிவின்
வலியை உணர்த்துகிறது....

என்னதான் இருந்தாலும்
என்னைவிட என்
எழுதுகோலுக்கே உன்மீது
காதல் அதிகம் அதனால்தான்
தினம்தினம் தன் உதிரம் தந்து
உயிர் கொடுகிறது என்
காதல் கவிதைகளுக்கு....

நம் பிரிவினை தாங்கிகொள்ள
முடியாமல் தினம் அழுதுபுலம்புகிறது
என் எழுதுகோல்-இதன்
கண்ணீர் ஒவ்வொரு பக்கதிலும்
முற்று பெறாமல் சற்று
ஈரமாகிய படி கற்று
கொடுகிறது காதலின் வலியை....

பிரிவு சோகம் ஏமாற்றம்
ஏக்கம் வலி இவைகளை
மட்டுமே அரிந்த என்
எழுதுகொலும் அது
எழுதிய பக்கங்களும்
உன் வருகைகாக
காத்திருகிறது எனைபோல...

தோழியே...

என் எண்ணத்தை தூது விட்டேன்

உன்னை நான் எழுப்ப

என் கவிதை என்பதெலாம் உன்னை

தாலாட்ட

இனி கவிதை ஒன்றை வைத்து

உன்னை எழுப்ப முடியாதே

என் எண்ணத்தின் கனவுகளை

அதனால் தூது விட்டேன்

உன்னை நான் எழுப்ப

Sunday, May 22, 2011

ஏன்? என்று தெரியவில்லை .......

உனக்கு பிடிக்கின்றது
என்பதற்காகவே
கவிதை எழுதினேன்
எல்லோருக்கும் என்
கவிதைகள் பிடிக்கின்றது .
கவிதைகள் கேட்க
நீதான் அருகில் இல்லை
பிரிந்து சென்றாய்

ரகசியத்தை சொல்லிவிடு ....

இரத்தம் கூட பாயாத
பகுதியில் நீ எப்படி...?

காற்று கூட பார்த்ததில்லை
என்று கர்வம் கொண்டேனே
அதில் உன் கால்தடம் எப்படி...?

ஊசி நிற்கும் அளவு கூட
வெற்றிடம் இல்லையே
பின் உன் உருவம் எப்படி...?

என் இதயத்தில்.......!

Saturday, May 21, 2011

நேசித்து விடாதே....

இவ் உலகில் யாரையும் எல்லை
மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும் வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே....

தேடினேன் தேடுகிறேன்.....

தோழனாய் பல பேர் இருந்தும்
தேடினேன் தோழியை
நேற்றோடு துளைத்த என் வாழ்க்கையை
என்னோடு மறைந்த சில ஆசைகளை
அவளோடு பகிந்து கொள்ளவே விரும்பி
என் தேடலையும் துவங்கினேன்....

தெருவோரம் செல்லும் போது
கதவோரம் நின்று பார்க்கும்
சில பெண்கள் பின்னால் சில நாள்...

குட்டி சுவரில் அமர்ந்தபடி
வெட்டி கதை பேசும் எங்களை
எட்டி பார்த்து கடந்து செல்லும்
பள்ளி பெண்களின் பின்னால் சிலநாள்....

பேருந்தோடு செல்லும் போது இருக்கைதனை
இடம் கொடுத்து பாரி வள்ளலென படம் காட்டி
பெண் மனதில் இடம் பிடிக்க தினம்
பின்னால் சுற்றியபடி சில நாள்.....

சாலையில் நடக்கும் போது
தண்ணீர் பிடிக்க வந்து
தண்ணீர் காட்டும்
சில பெண்களுக்கு பின்னால் சிலநாள்...

திருவிழா தேர் பார்க்க
வந்த பெண்கள் பின்னால்
ஊர் பார்க்க நடந்து முகவரி கேட்டு
அலைபேசி எண்களை கொடுத்துவிட்டு
தினம் அழைப்புக்காக காத்திருந்து சிலநாள்....


சிலநாள் பலநாள் ஆக
உண்மையை புரிந்துகொட்டேன்
தோழியாக ஒருவள் கிடைக்க
தோழனாய் நாம் மாற வேண்டும்....

தேடினேன் தேடுகிறேன்
உண்மையான தோழியை
தோழியோ இன்னும் கேள்விக்குறியாய்.....

தோழியே நட்பில் புரியாத காரணம் சில

தோழியே

நட்பு தொடங்கிய நாட்களில்

இல்லை காரணங்கள் உன்னுடன் வாக்குவாதம்

செய்ய

பழகி ஒரு வாரம் ஆனதும் முளைக்கிறது

அத்தனை காரணமும் உன்னிடம்

வாக்குவாதம் செய்ய

நம் நட்பில் தொடங்கிய முதல் நாள்

இல்லையா நீ இப்போது சொல்லும்

வேலைகள் நான் செய்யும் வாக்குவாதம்

அத்தனையும் உன்னை பிரிய அல்ல

என்றும் உன்னை பிரியாமல் இருக்க

புரிந்து கொண்டால் நட்பு வாழும்

அதில் நான் வாழ்வேன் நட்புடன் உன் நண்பன்

Friday, May 20, 2011

சொல்லித் தெரிவதில்லை காதல்

சொல்லித் தெரிவதில்லை காதல்
ஐலவ்யூ என்று
உன்னிடம் உளறுவதில்
உடன்பாடில்லை எனக்கு
நான் உன்னைக் காதலிப்பதை
உணரவேண்டும் நீயாய்
பிறகு சொல்லிக்கொள்ளாமலேயே
காதலிப்போம் இருவரும்.........!!!!

இப்படிக்கு ஆண்கள்

உண்மையான காதலை

எப்படி மறுக்கவும்

பொய்யான காதலை

எப்படி ஏற்கவும் முடிகிறது உங்களால்

கற்று கொடுங்கள் எங்களுக்கும்

இப்படிக்கு ஆண்கள்

வழி தெரியாமல் நான் இன்றும்!!!

அவள் கொடுத்த

அவளின் புகைப்படத்தையும்

அவள் காதலையும்

சேமித்து வைத்தேன்

அன்று.....!!!

அவள் என்னை விட்டு

பிரிந்து சென்ற பின்

அவள் புகைப்படத்தை

அகற்றிவிட்டேன் என்னிடமிருந்து,

இருந்தும்,

அவள் கொடுத்து

சென்ற காதல்

நினைவுகளை அகற்ற

வழி தெரியாமல்

நான் இன்றும்!!!

Thursday, May 19, 2011

குத்திக் காட்டியது - என் தமிழ்

குத்திக் காட்டியது - என் தமிழ்
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!
தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!
காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!
இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்

அன்புத் தோழி..

பூத்து உதிர்ந்தப் பூவை
மண்ணில் கண்டேன்..
பூத்தும் உதிராத நட்பை
உன்னில் கண்டேன்
என் அன்புத் தோழி!

அதுவே நட்பாகும்…

இருவேறு உயிர்களின்...

மன உணர்வுகளின்
சங்கமத்தில்...

ஆம்...
உதடு சொல்லும் காற்றை
நிறுத்தி விளையாடும் விரல்
இசைக்கும்
புல்லாங்குழல் இசை போல்...

உதட்டின் உச்சரிப்பும்
உள்ளத்தின் உச்சரிப்பும் ஒன்றானால்
அதுவே நட்பாகும்…

கண்ணாடி மனது

"கண்ணாடி மனது.........."

எத்தனையோ நிகழ்வுகள்
உருவாக்கியிருக்கலாம்
நம்மில் சச்சரவுகளை..............

உன்மீது நான் கொண்ட
நட்போ.............

என்மீது நீ கொண்ட
அன்போ............

எது தடுத்ததெனத்
தெரியவில்லை..............

நூலிலையில் ஊசலாடிய
நம் உறவு அறுபடாமல்...........

எதிர்பார்த்தேன்
உன் இதழ்களில்
சிறு நகையொன்றை...............

ஆனால்,
செவிவிழுந்த வார்த்தைகளோ
கல்லாகி உடைத்தெறிந்தது - "என்
கண்ணாடி மனதை.............."

காதல் இரகசியம்

கனவில் வலது காலை வைத்தாள்
காதலில் இடது இதயத்தை வைத்தாள்
என்னவளே இதோ என்கண்கள்
எதிர்பார்த்து கொண்டிருக்கிறது
உன்னுள்ளும் உருத்தி கொண்டுதான் இருக்கும்
உயிரோடு நான் கலந்திருப்பதால்
மூச்சுக்கு மூச்சு
முழுதாய் என்னை மட்டுமே

Dishyum - Nenjangutil

Athu oru kalam ---- Athe neram athe idam

aaru-song-paakkaatha

அன்பு அப்படி தான்

வலிகளை
சுமக்கும்
இதயத்திற்கு....
கண்ணீர் சிந்த
தெரியாது !
கண்ணீர் சிந்தும்
கண்களுக்கோ வலிகள்
தாங்க முடியாது !
அன்பு அப்படி தான்.

யாரும் சொல்லாத முறையில்


எப்படி சொல்ல என் காதலை

யாரும் சொல்லாத முறையில்

என்னவளுக்கு புரிகின்ற வகையில்

கவிதையாய் சொல்லாமல்

கண்களால் சொல்லாமல்

கடிதம் மூலம் சொல்லாமல்

தூது ஏதும் அனுப்பாமல்

தனியே அழைத்து சொல்லாமல்

குறுஞ்செய்தியாய் அனுப்பாமல்

நிச்சயம் சொல்வேன்

வித்யாசமாய் சொல்ல ஒரு யோசனை

சொல்லேன் என்று அவளிடமே கேட்டு

காத்திருப்பேன்

அவளும் முயற்சித்தால் காதல்

நிச்சயம் வெளிப்படும் என்று

அவளை பிரிந்திருக்கும் வலி

என்னவென்று அவளே அறிய

நிலையானது நட்புறவு ஒன்றே !

காதலன் காதலிக்குள்ள உறவு -
கல்யாணமகும்வரை
“ நல்ல காதலர்கள் ”

கணவன் மனைவிக்குள்ள உறவு -
பிள்ளை பிறக்கும் வரை .
“நல்லதம்பதிகள் ”

தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு -
வாழ்க்கை அமைத்து கொடுக்கும் வரை .
“ அன்பான பிள்ளை ”

அண்ணன் தம்பிகள் உறவு -
படித்து ஆளாகும் வரை
“ நல்ல சகோதரர்கள் ”

தோழன் தோழிகளுக்குள்ள
நிலை மாறாத நட்புறவு -
இருந்தாலும் இறந்தாலும்
“ உயர் தோழர்கள் ”
“ உற்ற நண்பர்கள் ”
“ உண்மையான சிநேகிதர்கள் ”
“தளர்ந்த நிலையிலும்
பால்ய தோழர்கள் ”

இலை உதிர் காலம்

பசுமை நினைவுகள்
மறைந்தபின், பாரமான
உயிரற்ற தினங்களை
உதிரும் காலம்.
இது இலை உதிர் காலம்

வாழ்க்கை ஓர் மாயம்

உன்னை
ஈன்றவர்கள் உன்
தாயும் தந்தையும்.
உன்
வாழ்கையை ஈன்றவர்கள்
இன்பமும் துன்பமும் .
உன் .
வறுமை துன்பமாகவும்
செல்வம் இன்பமாகவும்
வருவது இயற்கையே .....
அதை துரத்துவதும் வாழ்கையை அமைப்பதும்
உன்
கைல தான்.
ஏனென்றால் வாழ்க்கை ஓர் மாயம் ................
அதில் மயங்காதே .......
மற்றவரை பார்த்து ஏங்காதே.............
எல்லாம்
உன் கைல் தான் இருக்கு .
பார் இல்லையேனில்......
வாழ்க்கை ஓர் மாயமே .......................?

Wednesday, May 18, 2011

பாதை...


வழிதெரிய
பாதை போன்று
என் வாழ்க்கை,
முடிவும்
ஆரம்பமும் இல்லாத
கற்பனைகள்,
நிஜமும் போலியும்
அறிய முடியாத
உள்ளங்கள்,
இவைகள்
அனைத்தையும் மீறி
நான் வாழ்வதற்க்காய்
முன்வந்து நிற்கிறது
என் எதிர்காலம்".

என்னையறியாமல் திருடியவளே....



பக்குவமாய் பத்திரப்படுத்திய
என் இதயத்தை என்னையறியாமல் திருடியவளே....

உன்னை பார்த்த நிமிடத்தில்
உன் மேல் காதல் கொள்ளவில்லை...
...பழகிய தருணங்களிலும் ஆசை வரவில்லை...
வந்த நொடியும் அறியவில்லை..
இப்போது நானும் நானாக என்னிடத்தில் இல்லை...

உன்னை மட்டும் நினைக்க வைத்தாய்...
உன்னையே நினைத்து உருக வைத்தாய்...
மணிக்கணக்கில் என்னுடன் உரையாடி சென்றாய்...


"என் காதலை உன்னிடத்தில் சொல்ல
நீ நாணத்தில் முகம் சிவக்க
வார்த்தைகள் எல்லாம் தடு மாற
இருவரும் இன்பமாய் இணைவோமே.."
என்ற கனவுடன் வாழ்ந்தேன்...

அவளோ டைம் பாஸ் க்காக
பழகி இருக்கிறாள் ...
என் மனதோடு கண்ணாமுச்சி ஆடிஇருக்கிறாள்....

உன் விழி வழியே முதலில்
காதல் அம்பு எய்தவள் நீதானடி...
மையிட்டு மயக்கும் உன் மயக்கப் பார்வையின் போலி இந்த பைத்தியக்காரன் அறியவில்லயடி...
உன் பாசத்தில் உள்ள வேஷம்
மனசுக்கு புரியலயேடி...
என் உயிரோடு விளையாட உனக்கு விருப்பமடி....
என் உறவே உயிராக எனக்கொருவள் வருவாளேடி...
என் அன்பு உனக்கு புரியலடி..
உனக்கு புரியும் போது என்னை புரிந்து கொள்ள என் கனவு தேவதை என்னவள் இருப்பாளடி...

Tuesday, May 17, 2011

கற்றேன்!



நட்பின் இனிமையை பிரிவில் கற்றேன்!

காதலின் இனிமையை அணைப்பில் கற்றேன் !

அன்பின் ஆழத்தை காதலில் கற்றேன் !

சுயநலத்தை போலி நட்பில் கற்றேன் !

உயிரை தரும் தியாகத்தை உண்மை நட்பில்

கற்றேன் !

நீயே நான் , நானே நீ எனும் மந்திரத்தை

காதலியிடம் கற்றேன் !

எனக்கு எதிராக போட்டி போட்டு என்னையே தோற்கடிக்கும் வஞ்சகனே என் நண்பன் என கற்றேன்!

காதலியின் கணவனை அவளுடன் பார்த்த போது

காதலின் துரோகத்தை கற்றேன் !!

இறுதியில் நட்பு காதல் இரண்டிலும் எது உண்மை

எது பொய் என கற்றேன்!!


போதுமடா போதும்! பொல்லாத உலகம் டா !!

பெண்ணே


என்னை கண்டு
முகம்சுலிக்கும்
பெண்ணே..!- நீ
அழகானவள்தான்
ஆனால்...
காதல்
என்பது அழகில்லையடி
அதுஒருவகை அன்பு!



உன்னை விரும்புகிறேன்
என்று ஒரு வார்த்தைசொல்லி
என் இதயத்தைதிறந்துபார்!- அதில்
உன் ஆனவம்கூட
அழகாய் தெரியும்
!

என் எதிர்காலம்


வழிதெரிய

பாதை போன்று
என் வாழ்க்கை,
முடிவும்
ஆரம்பமும் இல்லாத

கற்பனைகள்,




நிஜமும் போலியும்
அறிய முடியாத
உள்ளங்கள்,
இவைகள்
அனைத்தையும் மீறி
நான் வாழ்வதற்க்காய்
முன்வந்து நிற்கிறது
என் எதிர்காலம்".

நட்பென்னும் பயணம் முடிவில்லா பயண

நட்பென்னும் பயணம் ...... 
முடிவில்லா பயணம் ....... 
தூரத்தை கண்டு மலைத்தாயோ... 
என் கரம் பிடித்து வா நட்பே..... 
நட்புக்கு புது பாதை அமைத்து தருவோம்.... 
நட்புள்ளங்கள் நமை தொடரட்டும்..... 




பள்ளங்கள் வரலாம்..... 
மேடுகளும் வரலாம்.... 
மலைகளும் தடுக்கலாம்.... 
ஆற...ுகளையும் கடக்கலாம்....... 
ஆறுதலுக்கு நான் உண்டே என் நட்பே...... 
மலைக்காதே தடைக்கற்கள் கண்டு.... 
கரம் பிடித்து வா கவலை தனை மறந்து..... 
மன மாச்சரியங்கள் மழை போல் வரலாம்.... . 
புரிதல் எனும் குடை உண்டே மழை தனை மறைக்க.... 
ஆம் நட்பே நமது நட்பென்னும் பயணம்.... 
முடிவில்லா பயணம்.......

வண்ணத்துபூச்சி...

எந்தன்
சித்திரத்தோட்டத்தில்
வண்ணத்துபூச்சி...

ஏதோ தேடுவதை
எதையோ விரும்புவதை
கண்டேன்...

நீண்ட தேடலுக்குப்பின்
கண்டது அந்த மலரை
அதன் பிரிய நேசத்தை...

எல்லாவற்றிலும் அரிதாய்
புனிதமாய் தெரிந்தது
மலர்...அந்த வண்ணக்கலவைக்கு...

தினம் அதை தேடி
வருகிறது
அதனருகில் இருக்க
விரும்புகிறது...
அதன்
வாசமே சுவாசமானது...





வெட்டி எறிந்தார்
மண்ணின் மேல்
மலரை...தோட்டக்காரர்...

சிறகடித்து பறந்து தேடுகிறது
மலரை...
வண்ணச்சிறகு விரித்து வாழ்ந்த வண்ணத்துப்பூச்சி...
என்றாவது காணுவோம்
என்ற ஏக்கத்தோடு...

கண்டது
வெயிலில் வாடிய
மலரை...
வலியில் துவண்டது
வண்ணத்துப்பூச்சி...

மலரை...நினைத்து...
மரணத்தை எதிர்நோக்கி...
வதங்கி விட்ட மலர்போல்
என் வாழ் நாளும்
முடியட்டுமென்று...

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!


(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )






































அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் களங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

என்னக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!


அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!


எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!!!