Thursday, May 19, 2011

யாரும் சொல்லாத முறையில்


எப்படி சொல்ல என் காதலை

யாரும் சொல்லாத முறையில்

என்னவளுக்கு புரிகின்ற வகையில்

கவிதையாய் சொல்லாமல்

கண்களால் சொல்லாமல்

கடிதம் மூலம் சொல்லாமல்

தூது ஏதும் அனுப்பாமல்

தனியே அழைத்து சொல்லாமல்

குறுஞ்செய்தியாய் அனுப்பாமல்

நிச்சயம் சொல்வேன்

வித்யாசமாய் சொல்ல ஒரு யோசனை

சொல்லேன் என்று அவளிடமே கேட்டு

காத்திருப்பேன்

அவளும் முயற்சித்தால் காதல்

நிச்சயம் வெளிப்படும் என்று

அவளை பிரிந்திருக்கும் வலி

என்னவென்று அவளே அறிய

No comments:

Post a Comment