Sunday, June 10, 2012

என் காதலின் கடைசி ஆசை

 பெண்ணே உன் 
புன்னகையை நிறுத்தி கொள் 
உன் புன்னகையால் புன்னகையை மறந்த 
நானும் கொஞ்சம் புன்னைகைத்து பார்க்கிறேன்... 

பெண்ணே உன் 
மௌனத்தை திறந்து விடு 
உன் மௌனத்தால் ஊமையான 
நானும் கூட சில வார்த்தைகள் பேசி பார்க்கிறேன்.... 

பெண்ணே உன்
கண்களை மூடி கொள்
உன் கண்களால் காட்சியிழந்த
நானும் கண் திறந்து பார்த்து கொள்கிறேன்....

பெண்ணே உன்
இதயத்தை திறந்து விடு
உன் இதயத்தில் சிறைபட்ட
நானும் சுதந்திரமாய் சுற்றி பார்க்கிறேன்....

பெண்ணே உன்னோடு
சேர்த்துகொள் என்னை
நானும் சில நாள் உயிரோடு வாழ்ந்து பார்க்கிறேன் உன் அரவணைப்பில்....

ஏனடி ஏமாற்றினாய்?


வலிக்கிறது என் இதயம் வலிக்கிறது நீ வேறொருவனிடம் இளிக்கையிலே,
பல நாள் காதலுடன் என் காதலி உன்னுடன் பல நொடிகளை கழிக்க
வந்தவனை சில நொடிகளில் சிதறடித்தாயடி,
உன் கைப்பிடித்து பல கதைகளை பேச வந்தேன் நான் நீ வேறொருவனின்
கைப்பிடித்து பேசி எனை கைம்மாணாக்கினாயே,
யாரும் கொள்ளாத காதலை நான் கொண்டிருந்தேன் உன்மேல்
நீயோ இன்று யாரோ ஒருவனுடன்,
தேவதையே உன்னை தேடி பல பூஞ்சோலைகளில் அலைய வேண்டுமென
எண்ணினேன், ஆனால் நீ தெருவோரத்தில் தேவையில்லாதவனுடன்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அழியாமலிருக்க நம் காதலை கல்வெட்டில்
செதுக்க நினைத்தேன் "நீயே" அதன் மேல் முள் வெட்டி போட்டாயடி,
என் ஆசைகள் சிறகடித்து வானில் பறவையாக பறந்ததடி உனை காணப் போகிறேன்
என்று நீயோ இன்று சிறகொடித்தாய் அதற்கு,
என் விழிகளில் பதிந்தவள் உன்னை வேறு ஒருவனுடன் வழிவதை
பார்க்கையிலே விழிகளில் வழிகிறது இரத்தக் கண்ணீர்,
உன்னை கொன்று விடவே துடிக்கின்றது நீ குடிகொண்டுள்ள இதயம்
அதன் உள்ளுள்ள காதல் அதனை மிஞ்சி உன்னை விடுகின்றது,
என்ன செய்கிறாய் தெரிகிறதா என்னவளே உண்மைக் காதலை உதைக்கிறாய் எட்டி,
எமன் வந்தாலும் செல்வேன் நான் இப்போது எம் உமையவளே என்னை ஏமாற்றிய பிறகு,
உயிருடன் சேர்த்துவைத்துள்ளேனடி உன்னை நீ வேறொருவனுடன்
சேர்ந்திருப்பது என்ன நியாயம்,
உன்னை சிறப்பாக சிரம் மேல் வைத்து காக்கவே காதலித்தேன் நீ வேறு ஒருவனின்
கரத்தைப் பிடித்து கதைக்கையில் என் கழுத்து காணாமல் போனது,
ஏன் பெண்ணே ஏமாற்றினாய் ஏன்????????

Friday, May 4, 2012

வலிதீர வழி என்ன


பாவையே.....

இடைவெளிவிட்டு துடிக்கும்
என் இதயம் கூட...

இன்று இடைவெளி இல்லாமல்
அழுகிறது...

உன் பிரிவால்...

என் அழுகுரலே உனக்கு
கேட்கவில்லை...

என் இதயத்தின் அழுகுரலா உனக்கு
கேட்டிருக்க கூடும்.....


நீ பறித்து போன என் இதயம்


நீ பறித்து போன என் இதயம்
எங்கே?
உன் முகம் பார்த்து மலரும் தாமரையாய் இருந்த
என் கண்கள் இன்று மலராமல்....

உன் குரல் கேட்டு விடியும் என்
நாட்கள் இன்று விடியாமல்......

எப்போதும் சின்னுங்கி கொண்டு இருக்கும்
கைபேசி
இன்று எங்கோ ஒரு முலையில் முடமாகி கிடக்கிறது.....

நீ இல்லாத நாட்கள் நகர மாறுகின்றன...
உன் அருகாமை இல்லாத உலகம் எனக்கே அந்நியமாய்....

போதும் இந்த தண்டன்னை...

என்னதான் கேட்கிறாய்?
இந்த பலாய்போன காதலை மீண்டும் உயர்பிக்க.....


பிரிவை எதிர்நோக்கும் காதல்...!


அன்று... நீ காதலை சொன்னாய்...
மனதில் ஏதோ மத்தாப்பு சாரல்...
இதயத்தில் தேன் மழை
இனம் புரியா சந்தோஷம்...
புதிதாய் பிறந்த உணர்வு...
அது வரையில்
உன்மேல் இருந்ந அன்பு
காலப்போக்கில் காதலானது...
உலகம் அழகானது...
ஆனால்...
நாட்கள் செல்லச் செல்ல
இதயத்தில் வளரும்
காதலுக்கு போட்டியாய்
மனதில் பயம் வளர்கிறது...
என் விழியில்
கண்ணீர் துளிகளை
காணாத நான்
என் இதயத்தில்
ரத்தம் கசிவதை உணர்கிறேன்...
வாழ்க்கை இருட்டானது...
நான் கேட்காமல்
கடவுள் கொடுத்த பரிசு
நீயும்... உன் காதலும்
கையருகில் நீ இருந்தும்
நமது இரு கரங்கள்
இணையாதென்பது நிஜம்...
நம் காதல் தோற்கையில்
அதற்கு ஆயிரம் காரணங்கள்
சிதறி கிடக்கும்...
ஆனால்,
நம் காதல் ஜெயித்தால்
அதற்கு ஒரே காரணம்
நம் காதல் உண்மையானது...!

உன் நினைவுகள்
யாரும் கொடுக்க முடியாத
வேதனை...
யாராலும் திருட முடியா
பொக்கிஷம்...! 

Monday, March 5, 2012

என்னவளே எனக்கு இன்னும் கொஞ்சம் வலிகொடு ! நான் வலிகளை எழுதுவதில் வைர முத்துவை தோற்கடிக்க வேண்டும் !

வலிகளே வாழ்கையானதோ ?
அன்பே ! நிரந்தரம் உன் பிரிவு என்றால்
இன்றே மரிப்பேன் என் உயிரை !
விழிகளோரம் உன் நினைவுகள் கண்ணீராக !
விதி மட்டும் ஏங்குதடி உன்னையும்
என்னையும் சேர்க்க !

கண்ணில்லாத இந்த காதல்
என் கண்ணீர்க்கு மட்டும் சொந்தமானதேனோ !
உண்மையோடு பிறந்த இந்த காதல்
இன்று நடு வழியில் ஊனமாக !
என் வலியின் ஆழத்தை நான் அவளுக்கு
இதுவரை உணர்த்தவில்லை !
தாங்க மாட்டாள் அந்த பிஞ்சு இதயத்துக்கு
சொந்தக்காரி !

காதலித்து திருமணம் செய்து கொண்ட
அவளது பெற்றோர்களே ! உங்களுக்கு தெரியாதா ?
அளவிட முடியாத அந்த வலியின் ஆழம் !
மனம் முழுவதும் மணம் வீசிய என் ரோஜா
இன்று தனி அறையில் தனி மரமாக !
காரணம் இல்லாமல் பிரிக்க துடிக்கும்
உன் பெற்றோர் !

கண்ணீர் மட்டும் போதாதடி !
உன் நினைவுகளை அழிக்க !
என்னவளே எனக்கு இன்னும் கொஞ்சம் வலிகொடு
நான் வலிகளை எழுதுவதில்
வைர முத்துவை தோற்கடிக்க வேண்டும் .....

Tuesday, February 28, 2012

ஆ..பாசங்கள்....

பண்பாட்டின் பிறப்பிடம் ...
பயணிக்கிறது பயந்து கொண்டே ...
மறைத்து வைக்கப்பட்ட மானம்
மறைவாய் திரையிட படுகிறது ..!!!

ஒழுக்கத்தின் உறைவிடம்
ஒன்றாம் வகுப்பறையிலேயே
ஒழித்து வைக்கபடுகிறது
ஒ... முன்னேற்ற முதற் படி !!!!

கல்வியின் கலங்கரை க்கு
கட்டும் சமாதி யுத்திகளை
கற்கும் கல்வி கூடங்களில்
காண்கிறோமே .. காட்சிகளை!!!

திறந்த வழி படிப்பு
பல்கலை கழகங்களில் மட்டுமல்ல
சிறந்த வகை மொபைல் (கைபேசி ) கூட
எல்லா படிப்பு பிரிவுகளும்
கற்பித்து கொடுக்கிறது (ஆபாசங்களை) !!!

காதல் என்பது கட்டாய பாடம்
கல்வி என்பது விருப்ப பாடம்
கல்லூரி வளாகங்களில் ..
பீச்சுகள் சீ ...சீ ... ஆனது
பூங்காக்கள் ... பொலிவிழந்தது


நண்பேண்டா...அவன்தான்
கணிபொறி ..இன்டெர் நெட்
காமாட்சி ...யினை காண
கணி பொறி தேடலில்
கா..என்று தட்டும் நொடியில்
கா .யில் ஆரம்பிக்கும்
காம படங்கள் ...காம கதைகள்
என்று.. தானே காண்பிக்கும்
கணிபொறி நண்பன் ..

எத்தனை அறிவியல்
என்ன என்ன கண்டு பிடித்தாலும்
அதில் காண கூடாததை
தேடி கொண்டிருக்கும்
கடமை உள்ள மாணவர்கள் ...

புத்தகம் தவிர அனைத்தையும்
சுமக்கும் மாணவர்கள் ..
புத்தகம் தவிர அனைத்தையும்
இழக்கும் மாணவிகள்...
மதிப்பெண் குறைந்தால்
மரணம் தேடும் ஒரு கூட்டம்..

திருமணம் இன்றும்
சொர்க்கத்தில் தான்
நிச்சயிக்க படுகிறது
ஆனால் அதற்க்கு முன்
சில இடங்களில்
ஒத்திகை நடை பெறுகிறது ...

பரிதவிக்கும் பாச பெற்றோர்
அண்ணார்ந்து பார்க்கும் ஆசிரியர்கள்
கவலையில் காணும் காவலர்கள்
எல்லோரும் இப்படி இருக்க
இன்னுமாய் தொடர்கிறது ..
பண்பாட்டின் பிறப்பிடம் ...
பயணிக்கிறது பயந்து கொண்டே ...


Sunday, February 26, 2012

பழையபடி....

உன் பிரியம் மட்டும்
பழையபடி என்மீது....!
வேண்டாமே உன்
அன்பும் பாசமும்...புதிதாய்
எதுவும்
எனக்கு வேண்டாம்...!
மறுபடி தலை குனிய
மாட்டேன்...!

Thursday, February 23, 2012

நான் கோடீஸ்வரனாக உன் காதல் காரணமாகட்டும்

அன்பே
என் காதலை வெறுததை
மனபூர்வமாக ஏற்கிறேன்
எனக்காக ஒன்றை மட்டும்
திருப்பி கொடு
உனக்காக வீணான நிமிடங்களையும்
உனக்காக செலவழித்த பணங்களையும்
நானும் இருப்பேன் கோடீஸ்வரனாக்
கல்லறை உருவாக்கும் காதலின் நடுவில்
ஒரு கோடீஸ்வரனாக் உருவாக்கிய
காதலாய் விட்டு சென்ற நம் காதல் இருக்கட்டும்

முதல் கவிதை

கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும்
மனதில் ஒரு தயக்கம்!

எதை பற்றி எழுதுவது,
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி
மனம் குழம்பிக்கொண்டிருக்க,
பேனா மையில் ஈரம் காய்ந்தது
வார்த்தை வரவில்லை!

சில நேர நிசப்தம்,இறுதியில்
என் கை எதையோ எழுதத்தொடங்கியது!
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம்,
அந்த வார்த்தை அம்மா!!!!


Tuesday, February 21, 2012

காதல் கொடிது....காதல் கொடிது.....

காதல் கொடிது....காதல் கொடிது.....
கற்பனை செய்தே காலம் கழியும்.....
காதல் கொடிது....காதல் கொடிது.....

விரதம் தின்னும்....விரக்தியும் தின்னும்.....
விதையும் தின்னும்....விந்தையும் தின்னும்.....

உன்னையும் தின்னும்....என்னையும் தின்னும்....
இந்த மண்ணை போல...
உன்னையும் தின்னும்....என்னையும் தின்னும்....

விண்ணும் மண்ணும் விரல் தொட்டாலும்....
விழியில் விண்மீன் ஒளி பட்டாலும்......

நெஞ்சம் உன்னை தேடுமடி....
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடுமடி.....

கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன்...
உன் கனவு மட்டும் போதுமடி....
அது தினமும் தினமும் வேண்டுமடி......

கனவில் தினமும் நீ வந்தால் போதும்....
என் காயம் யாவும் ஆறுமடி....
என் காயம் யாவும் ஆறுமடி
....

Monday, February 20, 2012

ஓர் காதலின் மன்னிப்பு கடிதம்,,,,

கவலைகளும் ஏமாற்றங்களும்
என்னை சூழ்ந்து கொண்டதால்
கண்ணீரோடு கலந்து கொண்டிருக்கிறேன்
என் கவிதை வரிகளில்
உனக்காக நான் எழுதும்
என் காதலின் மன்னிப்பு கடிதத்தை

முறிந்து விட்டது என்று
நம் காதலை முறித்துவிட்டு போய்விட்டாய்
முறிந்து விழுந்தவனாக
இன்னும் தத்தளித்து கொண்டிருக்கிறேன்
இன்னும் உன் நினைவுகளால்

நம் காதலில் நான் செய்த பிழை என்னவென்று
இன்று வரை எனக்கு தெரியவில்லை
உனக்கு தெரிந்தால்
எனக்கு பதில் அனுப்பு

உன் வீட்டு தெருமுனைகளை
கடக்கும் போதெல்லாம்
என் கண்களை உன் வீட்டோரம்
விட்டு செல்கிறேன்
உன்னை கண்டுவிடாதோ
என்ற நம்பிக்கையில்

என்னால் உனக்கு என்ன நேர்ந்தது,,,,சொல்லிவிடு
களங்கமற்ற தூய்மையான காதல் தானே
நம் காதல்
என் விரல் நகம் கூட உன் மீது பட்டதில்லையே
கண் அசைவுகளாலும்
ஊமை புன்னகையோடுதானே
நம் காதலை பரிமாறிக்கொண்டோம்

உன்னிடம் பேசகூட தயக்க படுபவன்
இன்று உன்னிடம் தயக்கமின்றி
மண்டி இடுகிறேன்
என் காதலில் பிழை ஏதும் இருந்தால்
என்னை மன்னித்து விடு

இந்த உலகத்தில் என்னை
அதிகமாக நேசித்த ஜீவன் நீ,,,,
இன்று என்னை அதிகமாக வெறுக்க
என்ன காரணம்

இவன் எதுக்கும் லாயக்கில்லாதவன்
என்று சொன்னவர்கள் மத்தியில்
என்னையும் என் வாழ்க்கை முறைகளையும்
மாற்றிய தேவதை நீ,,,,
மற்றவர்கள் மதிக்கும் படி மாற்றியதும் நீ,,,,

என் வாழ்க்கை முறையில் என்னை
வெற்றியாளனாய் மாற்றிய உன்னை எப்படி மறப்பேன்
சொல் தேவதையே

உன்னை மட்டுமே
நினைத்து வாழ பழகிவிட்டேன்
உன்னை மட்டுமே நினைத்து வாழ்வதுகூட
உனக்கு கடினமாக தோன்றினால்

என்னை மன்னித்து விடு,,,,

நான் இன்றும் உன்னை நினைத்தே வாழ்ந்து கொண்டிருப்பதால்,,,,

இப்படிக்கு,,,,,,,,,,,,,,உன்னவன்

Wednesday, February 1, 2012

உன்னிடம் கேட்பேன் ஒன்று!.....

ஓ தென்றலே! நீ
சொல்லிவிடு! உன்
வசந்தத்தின் வாசத்தை!
ஓ மேகமே! நீ
சொல்லிவிடு உன்
கருங்கூந்தல் ரகசியத்தை!
ஓ நதியே! நீ
சொல்லிவிடு! யாரை
காதலிக்க இப்படி ஓடுகிறாய் என்று!
ஓ மயிலே! நீ
சொல்லிவிடு! யாரை
மயக்க இந்த வண்ணங்கள் என்று?
ஓ மானே! நீ
சொல்லிவிடு! உன் கண்களை
எனக்கு தானமாய் தந்து விடுவாயா என்று!
இந்த ரகசியத்தையெல்லாம் சொன்னால் !
அழகாக்குவேன் உங்களை எல்லாம் விட!
என் காதலியை!!!

Tuesday, January 31, 2012

மரண வலி புரிந்தது......

மரண வலி தெரியாது....
புரிந்தது..
மரண வலி
இப்படிதான் இருக்கும் என்று...
நீ எனை விட்டு
பிரிந்து சென்ற நாட்கள்....

ஏதோ ஒரு மழைநாளில்
உன் ஞாபங்களை
கண்ணீரால் தொலைத்த கையோடு
வானம் போலவே வாழ்வை
வெறுமையாய் களிக்கிறேன்..
வாசித்து எழுதுபவருக்கு மத்தியில்
உன்னை யோசித்து
எழுதிய கவிதைகளை
தீக்கிரையாக்கி குளிர்காய்கிறேன்..
எல்லாம் கொடுத்து விட்டேன்..
கொடுக்காமலே வைத்து கொண்டேன்..
கோபம் மட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் அதையும்
நீயே களவாடிக் கொள்ள
உன்னை விட்டு செல்கிறேன்..
இன்னும் தூரமாய்....

Thursday, January 26, 2012

காதலித்த நாட்களில்

நான் உண்ணக் காதலித்த
நாள் முதலாய் இருந்து
என்னை உனக்குப்
பிடிக்கவில்லை என்கிறாய்!

"நான் எப்படி இருந்தால்
உனக்குப் பிடிக்கும்...???"
என்று கேட்டேன்...

"நீ புகைபிடிக்கிறாய்
விட்டுவிடு" என்றாய்.

விட்டுவிட்டேன்.

"உன் நண்பர்கள் சரியில்லை
விட்டுவிடு" என்றாய்.

விட்டுவிட்டேன்.

உனக்காக நான்
இவ்வளவு செய்தும்
திரும்பவும் எனனைப்
பிடிக்கவில்லை என்கிறாய்!

காரணம் கேட்டதற்கு
"விட்டுவிடு, விட்டுவிடு...
என்று சொன்னதெல்லாம்
உனது பழக்கங்களையல்ல
'என்னை விட்டுவிடு'
என்றல்லவா
கூறினேன்"
என்று சொல்லிவிட்டு
சென்றுவிட்டாய்...

இனி நான் அந்த
நண்பர்களைத் தேடி
எங்கே போவேன்...???


Sunday, January 15, 2012

மறந்து விட்டாயே எப்போதும் போல்..

காதல் எனும் வார்த்தை
எனக்கு கவிதை எழுதிட மட்டும் தான் சாத்தியமானதே..

தோள் சாய்ந்த உன் நேசம்
தொடர்பு எல்லைக்கு வெளியில் போனதே..

புன்னகையால் சிகரம் ஏற்றினாய்...
உன் புன்னகை கண்டதற்கா
என்னை சிதையில் வாட்டினாய்..

கவிதைகள் கேட்டு கண் சிமிட்டினாய்..
கவிதை சொன்னதற்கா
என் காதலை கழுவில் ஏற்றினாய்..

அறுந்து போன பட்டமாய்
மனம் பிடி தேட அலைகிறது
எவரோடும் சிக்க மறுத்து
உன் இதயம் தேடியே பறக்கிறது..

வேறு துணை கண்டு
வாழச் சொல்கிறாய் உன் போல்..

உயிர் உன்னோடு நீ
பறித்து சென்றதை
மறந்து விட்டாயே எப்போதும் போல்..


Wednesday, January 11, 2012

காதலில் நிஜம் எதுவென நான் கேட்டேன் 
கண்கள் என்றாள் என்னவள் 
காதலில் சுகம் எதுவென நான் கேட்டேன் 
உனக்காக காத்திருக்கும் மனம் 
என்றாள் என்னவள் 
காதலில் வரம் எதுவென நான் கேட்டேன் 
உன் காதல் என்றாள் என்னவள் 
காதலில் பிரிவு எதுவென நான் கேட்டேன் 
பிரிவே இல்லை என்றாள் என்னவள் 
காதலில் சோகம் எதுவென நான் கேட்டேன் 
எனக்கு முன்னே உன் மரணம் என்றாள் 
என்னவள் 
காதலின் குழந்தை எதுவென நான் கேட்டேன் 
கவிதை என்றாள் என்னவள் 
காதலின் நிழல் எதுவென நான் கேட்டேன் 
உன் காலடி சுவடுகள் என்றாள் என்னவள் 
காதலில் பெரிய ரணம் எதுவென நான் கேட்டேன் 
உன் மரணம் எனக்கும் என் மரணம் உனக்கும் 
என்றாள் என்னவள் 
காதலில் எதிரி எதுவென நான் கேட்டேன் 
நாம் தான் என்றாள் என்னவள் 
காதலில் உயிர் எதுவென நான் கேட்டேன் 
என்னில் நீ உன்னில் நான் என்றாள் என்னவள்

காதலித்தேன்

இதயத்தை காதலித்தேன்,
அது மூச்சொடு சென்றது,
உயிரை காதலித்தேன்,
அது காற்றோடு சென்றது,
அன்பை காதலித்தேன்,
அது காதலோடு சென்றது,
காதலை காதலித்தேன்,
அது அவளிடம் சென்றது,
அவளை அல்லவா காதலித்தேன்,
அது அவளது திருமணத்தில் சென்றது,
நான் யாரை காதலிப்பது’
என் உயிரை அல்லவா காதலித்தேன்,
உடல் இல்லாமல்
கல்லறையில் சென்றது .........


Sunday, January 8, 2012

காதலின் வகைகள் தெரிஞ்சுக்க ரெடியா

எத்தனை ஜாதிகள் நம் நாட்டில்
குறைவுதான் நிச்சயம் சொல்வேன்
அதையும் தாண்டிவிட்டது
எங்கள் காதலின் வகைகள்
பார்த்த காதல்
பார்க்காமலே காதல்
சொல்லி காதல்
சொல்லாமலே காதல்
ஊர் சுற்றும் காதல்
உண்மையான காதல்
உரிமையான காதல்
தைரியமான காதல்
தில்லாலங்கடி காதல்
திருட்டு காதல்
கள்ள காதல்
கடுதாசி காதல்
குறுஞ்செய்தி காதல்
செல்போன் காதல்
வலைதள காதல்
விலைமாதர் காதல்
வேலைகாரி காதல்
சினிமா காதல்
கவிதை காதல்
காவிய காதல்
இருங்கப்பா கொஞ்சம் மூச்சு விட்டுக்கிறேன்
இன்னும் இருக்கு சொல்லனுமா
போதும் போதும் காதல்
போதாது என உருகும் மனமே
கைவிடாது கைபிடிப்பதே உண்மையான
காதலடா .....................

அன்னையே

அன்பின் வடிவே – உன் 
அகத்தில் பாச ஊற்றோ? 
நெஞ்சம் நிறை இன்பம் தந்து 
நெகிழ வைப்பாய் நீயே 
உறவென்ற வலைக்குள் - எனை 
உதிப்பித்தவள் நீயே 
உயிர் உருவமாய் கண்டுகொண்டேன் 
உண்மைத் தெய்வமாய் உனையே 

வான நிலாக்காட்டி சோறு ஊட்டி 
வாழ்வில் வழி காட்டி 
துணை நின்று என்னோடு 
துன்பம் விலக துணை புரிவாய் 

எக் காரியம் தொடங்க முதல் 
என் அன்னையே உனை தொழுதால் 
முன்னின்று காரியத்தில் 
முழுதாய் வெற்றி தந்திடுவாய் 

பாசத்தின் உறைவிடமே 
பணிகிறேன் உனையே அன்னையே
 

Saturday, January 7, 2012

நீ தானே கற்றுத்தந்தாய்...

நான் வாங்கும் புது பேனா கூட...
முதலில் உன் பெயரை தானே...
"எழுதி" மகிழ்கிறது..!

நான் அடையும் வெற்றிகள் கூட...
முதலில் உன் காதில் விழ வேண்டும்...
என்று தானே தவமிருக்கின்றன..!

கனவுகளே காணாத எனக்கு...
நீ தானே கனவுகளை காட்டினாய்..!

ஏங்கி ஏமாறுவதில் இருக்கும் சுகத்தை...
நீ தானே சொல்லி கொடுத்தாய்..!

நானாக பேசி நானாக சிரிக்கும்...
புதுக்கலையை நீ தானே கற்றுத்தந்தாய்..!

ஏனடி..?

உன் "பிரிவை" ஏற்க மட்டும்...
கற்று தர மறந்தாய்..!!


எனக்கு காதல் தேவை இல்லை

அன்பே
உன்னை பிரிவேன் என்றால் காதல்
தேவை இல்லை
மரணம் முடிவு என்றால் காதல்
தேவை இல்லை
தாயை பிரிய நேர்ந்தால் காதல்
தேவை இல்லை
உறவுகளை மறக்க நேர்ந்தால் காதல்
தேவை இல்லை
மனதார சொல்
இத்தனையும் இழந்து
எதை அடைய போகிறாய்
காதல் கொண்டு
என்றும் எனக்கு காதல் தேவை இல்லை