Tuesday, January 31, 2012

ஏதோ ஒரு மழைநாளில்
உன் ஞாபங்களை
கண்ணீரால் தொலைத்த கையோடு
வானம் போலவே வாழ்வை
வெறுமையாய் களிக்கிறேன்..
வாசித்து எழுதுபவருக்கு மத்தியில்
உன்னை யோசித்து
எழுதிய கவிதைகளை
தீக்கிரையாக்கி குளிர்காய்கிறேன்..
எல்லாம் கொடுத்து விட்டேன்..
கொடுக்காமலே வைத்து கொண்டேன்..
கோபம் மட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் அதையும்
நீயே களவாடிக் கொள்ள
உன்னை விட்டு செல்கிறேன்..
இன்னும் தூரமாய்....

No comments:

Post a Comment