Friday, August 12, 2011

அன்றும் இன்றும்......

அன்று!!!!
கையில் குத்திய முள்ளிற்க்காக
கண்கள் கண்ணீர் வடித்தன...
இன்று!!!!
கண்கள் பார்த்த பார்வைக்காக
நொடிக்கு நூறு முறை
துடிக்கின்றது என் இதயம்......!!!!!!
ஆம்.....?????
அது பட்ட காயத்திற்காக......!!!!!
இது கொண்ட காதலுக்காக......??????!!!!

காதல் சுயநலம் ......

காதல் ஒரு
சுயநலம்.........
ஆம்
உனக்கு நான்
எனக்கு நீ
என்று
மாறி உயிராக வாழும்
காதலர்களே.......

தன்னை கண்ணுக்குள்
வைத்து காத்த தாய்

பாராம் என்று கருதமால்
இத்தனை வருடம்
தோளில் சுமந்த
தந்தை

நாம்முடன் பாசமாக
வளர்ந்த உடன்பிறப்புக்கள்

என்று தொடங்கியது
என்று தெரியத நட்பு

இவற்றை அனைத்தையும்
மறந்து
காதலுக்காக வாழும்
காதலர்களே.......

ஏன் மறந்துவிட்டிர்கள்

நீ உயிராக வந்த
நொடி முதல்
உன் முகம் தெரியாமல்
நேசித்த அன்னை
உன்னை கையில் எந்திய
நாள் முதல்
உனக்காக் வாழும்
த்ந்தை

சண்டை என்றாலும்
மற்றவர்களிடம்
என் உடன்பபிறப்பு
என்று விட்டு கொடுக்காமல் பேசும்
உடன்பிறப்பு

நீ எது செய்தாலும்
உனக்கு துனையாக
இருக்கும் நண்பர்கள்

இவை
அனைத்தையும்
இழந்து காதலை
வாழ வைக்க
போகும்
காதலர்களே.......

ஒரே ஒரு
முறை யோசித்திர்களா?

உன் அனனை
உனனை சுமக்க மாட்டேன் என்றால்?
நீ எப்படி பிறந்து இருப்பயை?

உன் தந்தை
தோளில் சுமக்க மாட்டேன் என்றால்?
நீ எப்படி வாழந்து இருப்ப்யை?

இவர்கள் இல்லை என்றால்?
நீயே இல்லை....
இதில்
உன் காதல் எப்படி வந்து இருக்கும்?
காதலை இழக்க போகிறயா?
இல்லை
உன் வாழ்க்கை இழக்க போகிறயா?

வாழ்க்கை இழக்க தயராக இருக்கிறாய்? என்றால்
நிச்சயம்
ஒரு நாள்
நீ கண்டடிப்பா
வருந்துவாய்
நீ கொண்ட காதலுக்கா?

அம்மா கிறுக்கிய கவிதை.......

எந்த வேலையும் செய்யாமல்
அடிக்கடி கவிதை கிறுக்குகிறேன்
என அம்மா திட்டுவாள்..
பாவம் ! அவள் அறியவில்லை
அவள் கிறுக்கிய
அழகிய கவிதை
நான் என்று ..

கண்ணீர் கதை.........

கண்களுக்கு மதகுகள்
திறந்து விட்டது யாரோ
கன்னம் வழி பாய்கிறது ....
கண்ணீரில் எத்தனை விதம்
சில நேரம் பிடிவாதத்தில்
சில நேரம் தோல்வியில்
சில நேரம் ஏமாற்றத்தில்
சில நேரம் சந்தோசத்தில்
அம்மாவிடம் அதிகம்
சாதித்து காட்டும் இந்த கண்ணீர்
பெண்கள் அழுது சாதிப்பார்கள்
ஆண்களின் குற்ற சாட்டு
பிரசவ வழியில்
அம்மா விடும் கண்ணீரில்
பிறக்கிறோம்
நமக்கு அடையாளம் கூட
கண்ணீர்
அழுத பின் தான்
நம்மை ஏற்று கொள்கிறது
மனிதனாய் பிறந்ததில்
தானாய் கற்று கொள்வது அழுகை தான்
மனித வாழ்க்கை முடிவதும் அழுகையில் தான்
அழுது தான் அனுப்பி வைக்கிறோம்
பிறக்கும் பொது அழுகிறவன்
போகிறபோது மற்றவரை
அழ வைத்து கொண்டு போகிறான்
எனக்கு ஒன்று ஆசை
எத்தனை விதமான கண்ணீர்
உலகத்தில் உண்டு என்பதை
கண்டு பிடிக்க வேண்டும்

கண்ணிரிடம் கேட்டால்
சொல்லிவிடுமா
எத்தனை கண்ணீர் என்று
அழுத பிள்ளை பால் குடிக்கும்
சொல்லி கொடுக்கும் உலகம்
முதலை கண்ணீர் வடித்து
காரியத்தை சாதித்து கொள்ளும்
சில சுய நலவாதிகலின் கண்ணீர்
அதை விட மற்றவர்களுக்காய்
வடிக்கும் புனித கண்ணீர்
காதல் செயிக்க
பெண் வடிக்கும்
போரட்ட கண்ணீர்
பிரிவு தாங்க முடியாமல்
உறவுகள் வடிக்கும் சோக கண்ணீர்

சத்தமாய் சில பேர்
மௌனமாய் சில பேர்
பொய்யாய் சில பேர்
அழுதாலும்
அழுகை ஒரு வரம் தான்

Thursday, August 11, 2011

பொய்யான வார்த்தை....

இந்த உலகில் பெண்கள் சொல்லும் பொய்யான வார்த்தை

"காதல்"


பெண்களின் காதல் ........

ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல் அழகுதான்.....

நம் கைகோர்த்து நடக்க
நம் மடிசாய்ந்து உறங்க
நம் தோல் சாய்ந்து அமர
நம்மோடு மனம் திறந்து பேச
இப்படி கணக்கில்லா ஆசைகள் இருந்தும்
நாம் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய் அமர்ந்து
நம்மை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகுதான்....

ஒரு வார்த்தை பேசமாட்டாள
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகுதான்....

தங்கம் வைரம் அம்மு செல்லம்
என்று குழந்தையென கொஞ்ச சொல்லி
கெஞ்சும் போதும் பின்னர் நம்மை
குழந்தையாய் கொஞ்சும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....

தலைவலியென சிறிய பொய்
சொன்னாலும் நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய வைக்கும்போதும்
பெண்களின் காதல் அழகுதான்....

ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல் அழகுதான்....

யாரேனும் நம்மை தவறாக பேசும் போது
அங்கே பேசாமல் இருந்துவிட்டு
பின்னர் நம்மை திட்டி தீர்க்கும் போது
பெண்களின் காதல் அழகுதான்.....

யார்கூடவும் பகிர்ந்து கொள்ளமுடியாத
விசயங்களை நம்மோடு பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல் அழகுதான்....

நாம் முதல் முறை காதலை சொல்லும் போது
முறைத்து பார்த்துவிட்டு
பின்னர் நம்மை காதல் கண்கள் கொண்டு
தாக்கும் போது பெண்களின் காதல் அழகுதான்....

நம்மோடு வெளியே வரும் போது
யாரும் பார்த்து விடுவார்களோ என்று
நம்மையும் சேர்த்து பயமுறுத்தும் போது
பெண்களின் காதல் அழகுதான்....

வெண்ணிலா ஐஸ் கிரீம்
டைரி மில்க் சாக்லேட்
மாசா கூல்ட்ரிங்க்ஸ்
இதுவே அதிகம் பிடிக்குமென
நம் செலவை சிக்கனம்
செய்யும் போது பெண்களின் காதல் அழகுதான்....

நம்மோடு பகிர்ந்து கொள்ள முடியாத
ஆசைகளை படுக்கை அறையில்
தலையனையோடு பகிர்ந்து கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகுதான்....

ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எரியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எரியும் போதும் பெண்களின் காதல் அழகுதான்
இரண்டில் எது நடந்தாலும்
அதிகம் பதிக்க படுவது பெண்கள்தான்....

ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில்
ஆண்களின் காதல் தோல்வி ஐ
காட்டிகொடுக்கும் தடியும் பீடியும்

ஆனால் பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலி
வாழ்க்கை முழுவதும்....

சுதந்திரமான இந்த உலகில்
சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள்
இந்த காதல் வானில் சிறகொடிந்த
பறவைகளே அதிகம்....

காதலன் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை
பெண்களின் காதலை
ஒருபோதும் ஒப்பிடமுடியாது
ஆண்களின் காதலோடு.....

Tuesday, August 9, 2011


பெண்ணிடம் வயதை கேட்ககூடாது உன்னிடம் கேட்டேன் கூறிவிட்டு வெட்கப்பட்டு ஓடினாய்....

ஆண்இடத்தில வருவாயை(வருமானம்)
கேட்ககூடாது.....
என்னிடம் கேட்டாய் அதற்க்கு வழி இல்லை
...
என்றேன் ......

இதற்க்கு மட்டும் ஏன் அன்பே திரும்பிக்கூட பார்க்காமல் தலைதெறிக்க ஓடுகிறாய்................
காதலி உன்னை இதயத்தில் சுமந்தாலும்
சுமையாக நினைத்துவிடுவாள்!
தாய் உன்னை கருவில் சுமந்தாலும்
சுமையையே சுகமாக நினைப்பவள்! முதலில் நீ உன் தாயை நேசித்துபார் ,
பிறகு உன் காதலிகூட உன்னை கருவில் சுமக்க நினைப்பாள்
!

ஈழ மக்களின் கடைசி கவிதை .....

எங்கள் கல்லறையில் எழுதுங்கள் எங்கள் மரணத்திற்கு காரணம் நாங்கள் பேசிய தாய்மொழி தமிழ் என்று..............!

முகநூல் நட்பு

தினம் தினம் நேரிடையை முகம் பார்க்க
முடியாதா முகநூல் நட்பு (Facebook)
நிழற்படம் ஒன்று நிஜம் என்று நம்பி
நித்தம் நித்தம் நட்புடன்...
நினைவுலைகள் நெஞ்சர பகிர்ந்து கொள்கிறோம்...
தினம் தினம் தித்திக்கும் தருணங்கள்
தேகிட்டதா இன்பங்கள் தொடரட்டும்......
நாளும் வாழ்த்துகள்.........

Thursday, August 4, 2011

விவாகரத்தை தடுக்க ........

குறை மட்டும் தெரிந்தால் போதாது,
நிறைகள் ,அவர்களின் கண்களுக்கு, நிரம்ப தெரியட்டும் ..

காதலை சொன்னால் மட்டும் போதாது,
கை பிடித்தபின் கடுன்சொற்கள் ஒருவரை ஒருவர் தைக்காமல் இருக்கட்டும்

உடல் மட்டும் இணைந்தால் போதாது,
அவர்களின் உள்ளங்கள் இணையட்டும்..

பணி மட்டுமே என்றிருந்தால் போதாது,
என்னில் பாதி அங்கே தனியே, என்று நீனைவிருகட்டும் ...

அறிவு நிரம்பி இருந்தால் போதாது,
அதில், அகந்தை இருவருக்கும் தலை தூக்காமல் இருக்கட்டும் ..

எதிர்பார்ப்புகளோடு மட்டும் இருந்தால் போதாது,
இருப்பதய் கொண்டு மனம் திருப்தி கொள்ளட்டும்...

பணம் மட்டும் என்றிருந்தால் போதாது,
அவர்களின் பாசம் ஒருவரை ஒருவர் நிரம்பி வழியட்டும் ...

தன் பெற்றோர் என்ற எண்ணம் இருந்தால் போதாது ,
நம் பெற்றோர் என்ற அன்பு பிறக்கட்டும் ...

சிறுக சேமித்து வீடு கட்டினால் போதாது ,
விட்டு கொடுப்பது என்ற நியதி மனதில் நிரம்பட்டும் ..


காதலுக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்.....

காதலுக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம் என்றாள் என்னிடம் .,நீ இல்லாமல் போனாலும் உன் மீது நான் கொண்ட காதல் என்றுமிருக்கும் .,,,நான் இல்லாமல் போனால் உன் மீதான கவிதை நின்றுபோய் இருக்கும்.,,


நண்பர்களோடு கூடி மகிழ்ந்த நாட்கள்......

நம் வாழ்வில் எத்தனையோ கோடி மகிழ்ச்சியான தருணங்களை கடந்து சென்றிருந்தாலும் அது நம் தோழர்களுடன் கூடி கழித்த சிலநொடி மகிழ்ச்சிக்கு ஈடாகுமோ .....
குட்டிசுவற்றின் மேல் அமர்ந்து குட்டிகதைகள் பேசி அரட்டை அடித்தது....

சாலையில் செல்லும் பெண்ணைகண்டு கூடி சண்டையிட்டு பார்வையால் ரசித்தது...

அதே பெண் தன் நண்பனின் காதலியாக மாறிவிட்டால் அவளை தன் தமக்கையாக பாவித்து
பாசமலரானது......

தேநீர்விடுதியில் மறைவாக நின்று ஒரு புகயிலைசுருள் வாங்கி நட்போடு
பகிர்ந்த்திளுத்தது....

தெருக்களில் மட்டைபந்து ஆடி நடந்துசெல்வோரின்
மண்டையை உடைத்தது...

^நாங்க எல்லாம் அந்த காலத்துல^ என்று போதனை செய்ய வரும் பெருசுகளை ^நாராயணா இந்த கொசுதொல்ல தாங்கலடா^ என்று குறும்பு செய்தது..

எதிர்வீட்டு மாமியை கூடிநின்று ஏடாகூடமாக சிந்தனை செய்தது....

மொட்டைமாடி நிலவொளியில் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டே உறங்கியது.........

நண்பனின் அக்காவின் திருமணத்திற்கு சென்று தண்ணீர் விருந்து என்னும் பெயரில் நண்பனிடம் பணம் பறித்து அவனை பாடாய்படுத்தியது.......

போதையில் தடுமாறிய நண்பனை தாங்க நண்பர்களின் கரங்கள் ஒன்றாய் கூடியது.....

காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இருந்த நண்பனை ஒன்றக சேர்ந்து சென்று கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று அவனை கடுப்படித்தது....

நண்பனின் காதலியை அவனோடு சேர்த்துவைத்து அதனை பெரும் சாதனையாக நினைத்து சந்தோஷத்தில் களித்த்தது....

சினிமா கொட்டகையில் சேர்ந்து சென்று சண்டையிளுத்து காவல்நிலையத்தில் சிக்கி தர்மஅடிவாங்கி நண்பனிடத்தில் மச்சான் வலி எப்புடிடா இருக்கு என்று கேள்வி வினவி அந்த வலியிலும் கூடி சிரித்தது......

வெளியூரில் வேலைக்கு செல்லும் நண்பனை கூடி சென்று வழி அனுப்பியது....

பொருளாதார சிக்கலில் சிக்கிய நண்பனின் கும்பத்திற்கு நட்பை தவிர வேறு ஏதும் எதிர்பாராமல் உதவி செய்து நண்பனின் சோகங்களை பகிர்ந்து கொண்டது....

எங்கும் காக்கை கூட்டம்போல ஒன்றாக சுற்றித்திரிந்தது .....

சிறு சிறு சண்டைகள் இட்டு பின் பிரிவின் வலியை உணர்ந்து கூடி திளைத்து......

இதைவிட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்வில் கிடைக்குமா? எப்போதும் இப்படியே வாழ்ந்துவிட வேண்டும் என்று மனது நினைக்கிறது , ஆனால் காலமோ நம்மை இதனை கடந்து செல்லவைத்து அதனை வெறும் நினைவலைகளாக மட்டும் உலாவர செய்கிறது......
நட்பின் சுகம் வேறு எதிலுண்டு கூறுங்கள் நண்பர்களே.......

உண்மையான ஆழமான காதல்.......


உண்மையான ஆழமான காதல்
என்னுடன் ஊர் சுற்ற வேண்டாம்

மணிகணக்கில் என்னுடன் பேசவேண்டாம்

...
எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியே உன் நாளை வீணாக்க வேண்டாம்

உன் சம்பாத்தியம் அனைத்தும் என்னக்காக இறக்க வேண்டாம்

பொய்யாக மெய்யாய் நடிக்க வேண்டாம்

உனக்கு பிடித்த ஒன்றை எனக்காக வெறுக்க வேண்டாம்

உனக்கு பிடிக்காத ஒன்றை உனக்கு பிடித்ததாய் என்னக்காக ஏற்றுக்கொள்ள வேண்டாம்

நீ நீயாக இருக்கையில் நான் உன்னை ஏற்க வேண்டும்

அதுதான் உண்மையான காதல்

அன்பான காதல்

ஆழமான காதல்

அழியாத காதல்

ரோஜாப் பூக்கள் நாங்கள்...


முள் வேலிக்குள்
சிக்கித்தவிக்கும்
ரோஜாப் பூக்கள் நாங்கள்...

எங்களின் கண்ணீர்
கலந்ததாலோ என்னவோ
இக்கடல் நீரும்
உப்பை இருக்கிறது!

புழுதியில் புரண்டு
விளையாட
ஆசைப் பட்டுதான்
இப்பூமியில்
வந்து பிறந்தோம்
எங்களை
புழுவுக்கு
இரையாக்கிவிட்டார்களே

என்
கருவறையையே
என் குழந்தைக்குக்
கல்லரையாக்கிவிட்டார்களே

பட்டாம்பூசிகளாய்ப்
பறந்துதிரிந்த
எங்கள்
பிள்ளைகளுக்கு
பாடைகட்டிவிட்டார்களே

கோடிக் கனவுகள்
லட்சம் ஆசைகளைக்
கொண்டு
இருக்கவில்லை நாங்கள்

உயிரோடு
வாழவேண்டுமென்ற
ஏக்கத்தோடு மட்டுமே
தவித்துக்
கொண்டிருக்கிறோம்

பிஞ்சுக்
குழந்தைகளைக் கூட
பஞ்சு பஞ்சாய்ப்
பிய்த்துத் தள்ளும்
இக்கொடிய மிருகங்களை
என்னவென்று சொல்ல!

செவ்வானம் கூட
நாங்கள்
சிந்திய
செந்நீரின்
எதிரொலிப்புதானோ என்னவோ...?

கடல் நீர்
வற்றினால் கூட
எங்கள்
கண்ணீர்
வற்றாது போலும்

கரம் கூப்பிக்
கேட்கிறோம்
எங்களை
காப்பாற்ற வருவீர்களா
தோழர்களே...?

என்ன உலகம் அம்மா......


என்ன உலகம் அம்மா , உன் கருவறை தான் இன்பம் அம்மா,
கண்ணீர் மட்டும் சொட்டும் காலம் இந்தக்காலம் ,
கனிவுள்ள இதயம் கண்டே கனகாலம், கனவுக்காலம் ,
மாசற்ற மனித முகங்கள் கூட , மாறுவது ஏன் அம்மா?
சஞ்சலங்கள் திராணியற்ற பேச்சுக்கள் இது தான் உலகமா?
...
உண்மை மனிதர்களை தேடுகின்றேன் அம்மா இந்த உலகில்
எத்தனை கொடுமைகளை கண்டாலும் , உன் நாமம் மட்டும் -
சொன்னாலே போதுமே , அமைதி வந்து அணைத்துக்கொள்ளுமே ,
எல்லா முகங்களுமே ஏதோ ஒன்றை தேடுகின்றது என்னை போலவே.

நடந்த போது .......

பெண்ணே
உன்
மலர் பாதங்கள்
பூமியில்
படாமல் தடுக்கும் ---கயவனான
...காலனிகளை கழற்றி எரி
ஏனெனில்
உன் மலர் பாதம் பட்டு
புவி வாழ் உயிரினங்கள்
மறு வாழ்வு பெறட்டும்!.....

இதுவரை
யாரும் கேட்டிடதா கீர்த்தனையை
நான்
ரசித்தேன்.
உன்
கொளுசொலியோடு இணைந்து
நீ !
நடந்த போது .......

கடல் அலைகள்
தொடர்ந்து சீறுவது
அதன்
எல்லைகளை தேடி அல்ல
அருகே
செல்லும்
உன்
மலர் பாதங்களை முத்தமிட....

அதை
அறியாத நீ
கடலலைகளை
தொடும் முன்னே
உன்
மலர் பாதங்களை
முத்தமிட்டதால்

தொடர்ந்து ஆர்பரிக்கும்
அந்த கடலலைகளையும்
இதமான கானங்களோடு
தழுவும்
அந்த கடல் காற்றையும்
அதை கண்ட
உற்சாகத்தில்
துள்ளி விளையாடும்
அந்த
சுறாக்களையும்
கண்ட
என் மனம்
கொதித்துதெழுகிறது.

பெண்ணே
சொல்லி விடு
அந்த கடல் காற்றுக்கும்
அந்த கடல் அலைகளுக்கும்
அணைகள் கட்டிவிடுவேன்....

ஏனெனில்
எனக்கும்
என்
உதட்டுக்கும்
சொந்தமான உன்னை
தொடர்ந்து
முத்தத்தோடு தழுவுவதால் .!.........

தமிழா தமிழா.......

தமிழா தமிழா சொல் தினமும் நீ
தரணியில் பேசுவது தமிழா சொல்

உலகின் முதல் மொழி தமிழ் உணர்
உலக மொழிகளின் தாய் தமிழ்

ஊடகத்தில் நாளும் நடக்குது தமிழ்க்கொலை
உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை

நாளிதழ் வானொலி தொலைக்காட்சி அனைத்திலும்
நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை

அழகு தமிழில் அம்மா இருக்கையில்
ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை

அற்புதத் தமிழில் அப்பா இருக்கையில்
ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை

தமிழோடு பிற மொழி கலந்துப் பேசுவது பிழை
தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு

ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலந்து
ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை

தமிழன்தான் தமிழ் பேசும்போது
தமிங்கிலம் பேசி உளறுகின்றான்

இரு கரம் குவித்து வணக்கம் சொல்
ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்து

உன்னால் ஏற்ப்பட்ட காதல் ..........


என்னிடம் இருந்த
சட்டை துணிகளில் ஓன்று தான்
கிழியாமல் இருந்தது அதையும்
அயர்ன் செய்து போட்டுவிட்டு
உன் வருகைக்காக காத்திருந்தேன்
...
என்னை பார்க்காமலேயே சென்று விட்டாய்

ஒட்டு வீட்டில் படுத்துக்கொண்டு
கண்ணாடி வழியே நிலாவை
ரசித்த படியே கவிதை எழுதி
உன்னிடம் கொண்டு வந்தேன் அதை
படிக்காமலேயே கிழித்துப் போட்டாய்

அம்மா கை செலவுக்கு கொடுக்கும்
கொஞ்ச கொஞ்ச காசை சேமித்து
உனக்கு பரிசு பொருட்கள் வாங்கி வந்தேன்
அதையும் தூக்கி எரிந்து
உடைத்துப்போட்டாய்

பெடல் இல்லாத என் பழைய
சைக்கிளில் செருப்புக்கூட இல்லாமல்
சைக்கிள் மிதித்து நீ போன
இடங்களில்லெல்லாம் உன் பின் வலம்
வந்தேன்
என்பின் சுற்றினால் செருப்பு பிஞ்சிடும்
என்று திட்டி சென்றாய் அதையும் தாங்கிக்கொண்டேன்

உன் தோழிகளுடன் நீ செல்லும்
போதெல்லாம் என்னை கேலியும் கிண்டலும்
செய்து சென்றாய் என் காதாலால்
அதையும் தாங்கிக்கொண்டேன்

நீ தூக்கி எறிந்த வாடின பூக்கள்
பூக்களோடு இருந்த உன் கூந்தல் முடிகள்
உன் உடைந்துப்போன வளையல்கள்
தொலைந்து போன உன் கைக்குட்டை
நீ எழுதி தீர்ந்து போன பேனாக்கள்
நீ கசக்கிப் போட்ட துண்டு காகிதங்கள்
உன் கொலுசுகளில் சிதறிய சில முத்துக்கள்
உன் அறுந்து போன செருப்புகள்
நீ குடித்துப்போட்ட பேப்பர் கப் என்று

நீண்டு கொண்டே போகிறது
என் காதலின் அடையாளமாக நான்
சேர்த்தவைகள்

உன் வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகளின்
போதெல்லாம் கல்லூரி தோழர்களையெல்லாம்
அழைப்பாய் என்னை தவிர

உன் அன்புக்கு
ஏங்கும் என் இதயத்தின்
வலிகளை நீ அறியாமலேயே போனாய்

நான் ஏழ்மையானவன் தான்
ஆனால் என்னுள் தூய்மையான
இதயம் இருப்பதை நீ மறந்து போனாய்

உன்னால் ஏற்ப்பட்ட காதல்
தழும்புகளுக்கு என்றுமே
அழிவில்லை உன் நினைவுகளுடன்
இரக்க முடியாத என் காதல் சிலுவைகளை
இன்றும் சுமந்து கொண்டிருக்கிறேன்........

இப்படிக்கு....................​............உன்னவன்

காதல் செய்.........

காதல் செய் காதலின் வலியை தாங்க முடிந்தால் !
காதல் செய் காதலின் சந்தோசம் தாங்கமுடிந்தால் !
காதல் செய் காதலியை ரசிக்க தெரிந்தால் !
காதல் செய் காதலியை மறக்க தெரிந்தால் !

சாக்கடை ....

கலை இழந்த ஓவியம் ....


மக்கிபோன மாளிகை ....


காய்ந்துபோன பூக்கள் ....


அழுக்கடைந்த சட்டை ....


தெய்வமே இல்லாத கோவில் ....


அமைதில்லாமல் தூங்கவைக்கும்
கல்லரை தோட்டம் ....


மொத்தத்தில் காதல் ஒரு ஒதுக்கப்பட வேண்டிய


சாக்கடை ....