Thursday, August 4, 2011

உன்னால் ஏற்ப்பட்ட காதல் ..........


என்னிடம் இருந்த
சட்டை துணிகளில் ஓன்று தான்
கிழியாமல் இருந்தது அதையும்
அயர்ன் செய்து போட்டுவிட்டு
உன் வருகைக்காக காத்திருந்தேன்
...
என்னை பார்க்காமலேயே சென்று விட்டாய்

ஒட்டு வீட்டில் படுத்துக்கொண்டு
கண்ணாடி வழியே நிலாவை
ரசித்த படியே கவிதை எழுதி
உன்னிடம் கொண்டு வந்தேன் அதை
படிக்காமலேயே கிழித்துப் போட்டாய்

அம்மா கை செலவுக்கு கொடுக்கும்
கொஞ்ச கொஞ்ச காசை சேமித்து
உனக்கு பரிசு பொருட்கள் வாங்கி வந்தேன்
அதையும் தூக்கி எரிந்து
உடைத்துப்போட்டாய்

பெடல் இல்லாத என் பழைய
சைக்கிளில் செருப்புக்கூட இல்லாமல்
சைக்கிள் மிதித்து நீ போன
இடங்களில்லெல்லாம் உன் பின் வலம்
வந்தேன்
என்பின் சுற்றினால் செருப்பு பிஞ்சிடும்
என்று திட்டி சென்றாய் அதையும் தாங்கிக்கொண்டேன்

உன் தோழிகளுடன் நீ செல்லும்
போதெல்லாம் என்னை கேலியும் கிண்டலும்
செய்து சென்றாய் என் காதாலால்
அதையும் தாங்கிக்கொண்டேன்

நீ தூக்கி எறிந்த வாடின பூக்கள்
பூக்களோடு இருந்த உன் கூந்தல் முடிகள்
உன் உடைந்துப்போன வளையல்கள்
தொலைந்து போன உன் கைக்குட்டை
நீ எழுதி தீர்ந்து போன பேனாக்கள்
நீ கசக்கிப் போட்ட துண்டு காகிதங்கள்
உன் கொலுசுகளில் சிதறிய சில முத்துக்கள்
உன் அறுந்து போன செருப்புகள்
நீ குடித்துப்போட்ட பேப்பர் கப் என்று

நீண்டு கொண்டே போகிறது
என் காதலின் அடையாளமாக நான்
சேர்த்தவைகள்

உன் வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகளின்
போதெல்லாம் கல்லூரி தோழர்களையெல்லாம்
அழைப்பாய் என்னை தவிர

உன் அன்புக்கு
ஏங்கும் என் இதயத்தின்
வலிகளை நீ அறியாமலேயே போனாய்

நான் ஏழ்மையானவன் தான்
ஆனால் என்னுள் தூய்மையான
இதயம் இருப்பதை நீ மறந்து போனாய்

உன்னால் ஏற்ப்பட்ட காதல்
தழும்புகளுக்கு என்றுமே
அழிவில்லை உன் நினைவுகளுடன்
இரக்க முடியாத என் காதல் சிலுவைகளை
இன்றும் சுமந்து கொண்டிருக்கிறேன்........

இப்படிக்கு....................​............உன்னவன்

No comments:

Post a Comment