Thursday, August 4, 2011

விவாகரத்தை தடுக்க ........

குறை மட்டும் தெரிந்தால் போதாது,
நிறைகள் ,அவர்களின் கண்களுக்கு, நிரம்ப தெரியட்டும் ..

காதலை சொன்னால் மட்டும் போதாது,
கை பிடித்தபின் கடுன்சொற்கள் ஒருவரை ஒருவர் தைக்காமல் இருக்கட்டும்

உடல் மட்டும் இணைந்தால் போதாது,
அவர்களின் உள்ளங்கள் இணையட்டும்..

பணி மட்டுமே என்றிருந்தால் போதாது,
என்னில் பாதி அங்கே தனியே, என்று நீனைவிருகட்டும் ...

அறிவு நிரம்பி இருந்தால் போதாது,
அதில், அகந்தை இருவருக்கும் தலை தூக்காமல் இருக்கட்டும் ..

எதிர்பார்ப்புகளோடு மட்டும் இருந்தால் போதாது,
இருப்பதய் கொண்டு மனம் திருப்தி கொள்ளட்டும்...

பணம் மட்டும் என்றிருந்தால் போதாது,
அவர்களின் பாசம் ஒருவரை ஒருவர் நிரம்பி வழியட்டும் ...

தன் பெற்றோர் என்ற எண்ணம் இருந்தால் போதாது ,
நம் பெற்றோர் என்ற அன்பு பிறக்கட்டும் ...

சிறுக சேமித்து வீடு கட்டினால் போதாது ,
விட்டு கொடுப்பது என்ற நியதி மனதில் நிரம்பட்டும் ..


No comments:

Post a Comment