Thursday, August 4, 2011

நண்பர்களோடு கூடி மகிழ்ந்த நாட்கள்......

நம் வாழ்வில் எத்தனையோ கோடி மகிழ்ச்சியான தருணங்களை கடந்து சென்றிருந்தாலும் அது நம் தோழர்களுடன் கூடி கழித்த சிலநொடி மகிழ்ச்சிக்கு ஈடாகுமோ .....
குட்டிசுவற்றின் மேல் அமர்ந்து குட்டிகதைகள் பேசி அரட்டை அடித்தது....

சாலையில் செல்லும் பெண்ணைகண்டு கூடி சண்டையிட்டு பார்வையால் ரசித்தது...

அதே பெண் தன் நண்பனின் காதலியாக மாறிவிட்டால் அவளை தன் தமக்கையாக பாவித்து
பாசமலரானது......

தேநீர்விடுதியில் மறைவாக நின்று ஒரு புகயிலைசுருள் வாங்கி நட்போடு
பகிர்ந்த்திளுத்தது....

தெருக்களில் மட்டைபந்து ஆடி நடந்துசெல்வோரின்
மண்டையை உடைத்தது...

^நாங்க எல்லாம் அந்த காலத்துல^ என்று போதனை செய்ய வரும் பெருசுகளை ^நாராயணா இந்த கொசுதொல்ல தாங்கலடா^ என்று குறும்பு செய்தது..

எதிர்வீட்டு மாமியை கூடிநின்று ஏடாகூடமாக சிந்தனை செய்தது....

மொட்டைமாடி நிலவொளியில் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டே உறங்கியது.........

நண்பனின் அக்காவின் திருமணத்திற்கு சென்று தண்ணீர் விருந்து என்னும் பெயரில் நண்பனிடம் பணம் பறித்து அவனை பாடாய்படுத்தியது.......

போதையில் தடுமாறிய நண்பனை தாங்க நண்பர்களின் கரங்கள் ஒன்றாய் கூடியது.....

காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இருந்த நண்பனை ஒன்றக சேர்ந்து சென்று கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று அவனை கடுப்படித்தது....

நண்பனின் காதலியை அவனோடு சேர்த்துவைத்து அதனை பெரும் சாதனையாக நினைத்து சந்தோஷத்தில் களித்த்தது....

சினிமா கொட்டகையில் சேர்ந்து சென்று சண்டையிளுத்து காவல்நிலையத்தில் சிக்கி தர்மஅடிவாங்கி நண்பனிடத்தில் மச்சான் வலி எப்புடிடா இருக்கு என்று கேள்வி வினவி அந்த வலியிலும் கூடி சிரித்தது......

வெளியூரில் வேலைக்கு செல்லும் நண்பனை கூடி சென்று வழி அனுப்பியது....

பொருளாதார சிக்கலில் சிக்கிய நண்பனின் கும்பத்திற்கு நட்பை தவிர வேறு ஏதும் எதிர்பாராமல் உதவி செய்து நண்பனின் சோகங்களை பகிர்ந்து கொண்டது....

எங்கும் காக்கை கூட்டம்போல ஒன்றாக சுற்றித்திரிந்தது .....

சிறு சிறு சண்டைகள் இட்டு பின் பிரிவின் வலியை உணர்ந்து கூடி திளைத்து......

இதைவிட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்வில் கிடைக்குமா? எப்போதும் இப்படியே வாழ்ந்துவிட வேண்டும் என்று மனது நினைக்கிறது , ஆனால் காலமோ நம்மை இதனை கடந்து செல்லவைத்து அதனை வெறும் நினைவலைகளாக மட்டும் உலாவர செய்கிறது......
நட்பின் சுகம் வேறு எதிலுண்டு கூறுங்கள் நண்பர்களே.......

No comments:

Post a Comment