Friday, May 4, 2012

வலிதீர வழி என்ன


பாவையே.....

இடைவெளிவிட்டு துடிக்கும்
என் இதயம் கூட...

இன்று இடைவெளி இல்லாமல்
அழுகிறது...

உன் பிரிவால்...

என் அழுகுரலே உனக்கு
கேட்கவில்லை...

என் இதயத்தின் அழுகுரலா உனக்கு
கேட்டிருக்க கூடும்.....


நீ பறித்து போன என் இதயம்


நீ பறித்து போன என் இதயம்
எங்கே?
உன் முகம் பார்த்து மலரும் தாமரையாய் இருந்த
என் கண்கள் இன்று மலராமல்....

உன் குரல் கேட்டு விடியும் என்
நாட்கள் இன்று விடியாமல்......

எப்போதும் சின்னுங்கி கொண்டு இருக்கும்
கைபேசி
இன்று எங்கோ ஒரு முலையில் முடமாகி கிடக்கிறது.....

நீ இல்லாத நாட்கள் நகர மாறுகின்றன...
உன் அருகாமை இல்லாத உலகம் எனக்கே அந்நியமாய்....

போதும் இந்த தண்டன்னை...

என்னதான் கேட்கிறாய்?
இந்த பலாய்போன காதலை மீண்டும் உயர்பிக்க.....


பிரிவை எதிர்நோக்கும் காதல்...!


அன்று... நீ காதலை சொன்னாய்...
மனதில் ஏதோ மத்தாப்பு சாரல்...
இதயத்தில் தேன் மழை
இனம் புரியா சந்தோஷம்...
புதிதாய் பிறந்த உணர்வு...
அது வரையில்
உன்மேல் இருந்ந அன்பு
காலப்போக்கில் காதலானது...
உலகம் அழகானது...
ஆனால்...
நாட்கள் செல்லச் செல்ல
இதயத்தில் வளரும்
காதலுக்கு போட்டியாய்
மனதில் பயம் வளர்கிறது...
என் விழியில்
கண்ணீர் துளிகளை
காணாத நான்
என் இதயத்தில்
ரத்தம் கசிவதை உணர்கிறேன்...
வாழ்க்கை இருட்டானது...
நான் கேட்காமல்
கடவுள் கொடுத்த பரிசு
நீயும்... உன் காதலும்
கையருகில் நீ இருந்தும்
நமது இரு கரங்கள்
இணையாதென்பது நிஜம்...
நம் காதல் தோற்கையில்
அதற்கு ஆயிரம் காரணங்கள்
சிதறி கிடக்கும்...
ஆனால்,
நம் காதல் ஜெயித்தால்
அதற்கு ஒரே காரணம்
நம் காதல் உண்மையானது...!

உன் நினைவுகள்
யாரும் கொடுக்க முடியாத
வேதனை...
யாராலும் திருட முடியா
பொக்கிஷம்...!