Thursday, August 4, 2011

நடந்த போது .......

பெண்ணே
உன்
மலர் பாதங்கள்
பூமியில்
படாமல் தடுக்கும் ---கயவனான
...காலனிகளை கழற்றி எரி
ஏனெனில்
உன் மலர் பாதம் பட்டு
புவி வாழ் உயிரினங்கள்
மறு வாழ்வு பெறட்டும்!.....

இதுவரை
யாரும் கேட்டிடதா கீர்த்தனையை
நான்
ரசித்தேன்.
உன்
கொளுசொலியோடு இணைந்து
நீ !
நடந்த போது .......

கடல் அலைகள்
தொடர்ந்து சீறுவது
அதன்
எல்லைகளை தேடி அல்ல
அருகே
செல்லும்
உன்
மலர் பாதங்களை முத்தமிட....

அதை
அறியாத நீ
கடலலைகளை
தொடும் முன்னே
உன்
மலர் பாதங்களை
முத்தமிட்டதால்

தொடர்ந்து ஆர்பரிக்கும்
அந்த கடலலைகளையும்
இதமான கானங்களோடு
தழுவும்
அந்த கடல் காற்றையும்
அதை கண்ட
உற்சாகத்தில்
துள்ளி விளையாடும்
அந்த
சுறாக்களையும்
கண்ட
என் மனம்
கொதித்துதெழுகிறது.

பெண்ணே
சொல்லி விடு
அந்த கடல் காற்றுக்கும்
அந்த கடல் அலைகளுக்கும்
அணைகள் கட்டிவிடுவேன்....

ஏனெனில்
எனக்கும்
என்
உதட்டுக்கும்
சொந்தமான உன்னை
தொடர்ந்து
முத்தத்தோடு தழுவுவதால் .!.........

No comments:

Post a Comment