Wednesday, January 11, 2012

காதலில் நிஜம் எதுவென நான் கேட்டேன் 
கண்கள் என்றாள் என்னவள் 
காதலில் சுகம் எதுவென நான் கேட்டேன் 
உனக்காக காத்திருக்கும் மனம் 
என்றாள் என்னவள் 
காதலில் வரம் எதுவென நான் கேட்டேன் 
உன் காதல் என்றாள் என்னவள் 
காதலில் பிரிவு எதுவென நான் கேட்டேன் 
பிரிவே இல்லை என்றாள் என்னவள் 
காதலில் சோகம் எதுவென நான் கேட்டேன் 
எனக்கு முன்னே உன் மரணம் என்றாள் 
என்னவள் 
காதலின் குழந்தை எதுவென நான் கேட்டேன் 
கவிதை என்றாள் என்னவள் 
காதலின் நிழல் எதுவென நான் கேட்டேன் 
உன் காலடி சுவடுகள் என்றாள் என்னவள் 
காதலில் பெரிய ரணம் எதுவென நான் கேட்டேன் 
உன் மரணம் எனக்கும் என் மரணம் உனக்கும் 
என்றாள் என்னவள் 
காதலில் எதிரி எதுவென நான் கேட்டேன் 
நாம் தான் என்றாள் என்னவள் 
காதலில் உயிர் எதுவென நான் கேட்டேன் 
என்னில் நீ உன்னில் நான் என்றாள் என்னவள்

No comments:

Post a Comment