என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Thursday, January 26, 2012
காதலித்த நாட்களில்
நான் உண்ணக் காதலித்த
நாள் முதலாய் இருந்து
என்னை உனக்குப்
பிடிக்கவில்லை என்கிறாய்!
"நான் எப்படி இருந்தால்
உனக்குப் பிடிக்கும்...???"
என்று கேட்டேன்...
"நீ புகைபிடிக்கிறாய்
விட்டுவிடு" என்றாய்.
விட்டுவிட்டேன்.
"உன் நண்பர்கள் சரியில்லை
விட்டுவிடு" என்றாய்.
விட்டுவிட்டேன்.
உனக்காக நான்
இவ்வளவு செய்தும்
திரும்பவும் எனனைப்
பிடிக்கவில்லை என்கிறாய்!
காரணம் கேட்டதற்கு
"விட்டுவிடு, விட்டுவிடு...
என்று சொன்னதெல்லாம்
உனது பழக்கங்களையல்ல
'என்னை விட்டுவிடு'
என்றல்லவா
கூறினேன்"
என்று சொல்லிவிட்டு
சென்றுவிட்டாய்...
No comments:
Post a Comment