Saturday, January 7, 2012

நீ தானே கற்றுத்தந்தாய்...

நான் வாங்கும் புது பேனா கூட...
முதலில் உன் பெயரை தானே...
"எழுதி" மகிழ்கிறது..!

நான் அடையும் வெற்றிகள் கூட...
முதலில் உன் காதில் விழ வேண்டும்...
என்று தானே தவமிருக்கின்றன..!

கனவுகளே காணாத எனக்கு...
நீ தானே கனவுகளை காட்டினாய்..!

ஏங்கி ஏமாறுவதில் இருக்கும் சுகத்தை...
நீ தானே சொல்லி கொடுத்தாய்..!

நானாக பேசி நானாக சிரிக்கும்...
புதுக்கலையை நீ தானே கற்றுத்தந்தாய்..!

ஏனடி..?

உன் "பிரிவை" ஏற்க மட்டும்...
கற்று தர மறந்தாய்..!!


No comments:

Post a Comment