Sunday, January 15, 2012

மறந்து விட்டாயே எப்போதும் போல்..

காதல் எனும் வார்த்தை
எனக்கு கவிதை எழுதிட மட்டும் தான் சாத்தியமானதே..

தோள் சாய்ந்த உன் நேசம்
தொடர்பு எல்லைக்கு வெளியில் போனதே..

புன்னகையால் சிகரம் ஏற்றினாய்...
உன் புன்னகை கண்டதற்கா
என்னை சிதையில் வாட்டினாய்..

கவிதைகள் கேட்டு கண் சிமிட்டினாய்..
கவிதை சொன்னதற்கா
என் காதலை கழுவில் ஏற்றினாய்..

அறுந்து போன பட்டமாய்
மனம் பிடி தேட அலைகிறது
எவரோடும் சிக்க மறுத்து
உன் இதயம் தேடியே பறக்கிறது..

வேறு துணை கண்டு
வாழச் சொல்கிறாய் உன் போல்..

உயிர் உன்னோடு நீ
பறித்து சென்றதை
மறந்து விட்டாயே எப்போதும் போல்..


No comments:

Post a Comment