Sunday, January 8, 2012

அன்னையே

அன்பின் வடிவே – உன் 
அகத்தில் பாச ஊற்றோ? 
நெஞ்சம் நிறை இன்பம் தந்து 
நெகிழ வைப்பாய் நீயே 
உறவென்ற வலைக்குள் - எனை 
உதிப்பித்தவள் நீயே 
உயிர் உருவமாய் கண்டுகொண்டேன் 
உண்மைத் தெய்வமாய் உனையே 

வான நிலாக்காட்டி சோறு ஊட்டி 
வாழ்வில் வழி காட்டி 
துணை நின்று என்னோடு 
துன்பம் விலக துணை புரிவாய் 

எக் காரியம் தொடங்க முதல் 
என் அன்னையே உனை தொழுதால் 
முன்னின்று காரியத்தில் 
முழுதாய் வெற்றி தந்திடுவாய் 

பாசத்தின் உறைவிடமே 
பணிகிறேன் உனையே அன்னையே
 

No comments:

Post a Comment