Sunday, June 10, 2012

ஏனடி ஏமாற்றினாய்?


வலிக்கிறது என் இதயம் வலிக்கிறது நீ வேறொருவனிடம் இளிக்கையிலே,
பல நாள் காதலுடன் என் காதலி உன்னுடன் பல நொடிகளை கழிக்க
வந்தவனை சில நொடிகளில் சிதறடித்தாயடி,
உன் கைப்பிடித்து பல கதைகளை பேச வந்தேன் நான் நீ வேறொருவனின்
கைப்பிடித்து பேசி எனை கைம்மாணாக்கினாயே,
யாரும் கொள்ளாத காதலை நான் கொண்டிருந்தேன் உன்மேல்
நீயோ இன்று யாரோ ஒருவனுடன்,
தேவதையே உன்னை தேடி பல பூஞ்சோலைகளில் அலைய வேண்டுமென
எண்ணினேன், ஆனால் நீ தெருவோரத்தில் தேவையில்லாதவனுடன்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அழியாமலிருக்க நம் காதலை கல்வெட்டில்
செதுக்க நினைத்தேன் "நீயே" அதன் மேல் முள் வெட்டி போட்டாயடி,
என் ஆசைகள் சிறகடித்து வானில் பறவையாக பறந்ததடி உனை காணப் போகிறேன்
என்று நீயோ இன்று சிறகொடித்தாய் அதற்கு,
என் விழிகளில் பதிந்தவள் உன்னை வேறு ஒருவனுடன் வழிவதை
பார்க்கையிலே விழிகளில் வழிகிறது இரத்தக் கண்ணீர்,
உன்னை கொன்று விடவே துடிக்கின்றது நீ குடிகொண்டுள்ள இதயம்
அதன் உள்ளுள்ள காதல் அதனை மிஞ்சி உன்னை விடுகின்றது,
என்ன செய்கிறாய் தெரிகிறதா என்னவளே உண்மைக் காதலை உதைக்கிறாய் எட்டி,
எமன் வந்தாலும் செல்வேன் நான் இப்போது எம் உமையவளே என்னை ஏமாற்றிய பிறகு,
உயிருடன் சேர்த்துவைத்துள்ளேனடி உன்னை நீ வேறொருவனுடன்
சேர்ந்திருப்பது என்ன நியாயம்,
உன்னை சிறப்பாக சிரம் மேல் வைத்து காக்கவே காதலித்தேன் நீ வேறு ஒருவனின்
கரத்தைப் பிடித்து கதைக்கையில் என் கழுத்து காணாமல் போனது,
ஏன் பெண்ணே ஏமாற்றினாய் ஏன்????????

No comments:

Post a Comment