Sunday, June 10, 2012

என் காதலின் கடைசி ஆசை

 பெண்ணே உன் 
புன்னகையை நிறுத்தி கொள் 
உன் புன்னகையால் புன்னகையை மறந்த 
நானும் கொஞ்சம் புன்னைகைத்து பார்க்கிறேன்... 

பெண்ணே உன் 
மௌனத்தை திறந்து விடு 
உன் மௌனத்தால் ஊமையான 
நானும் கூட சில வார்த்தைகள் பேசி பார்க்கிறேன்.... 

பெண்ணே உன்
கண்களை மூடி கொள்
உன் கண்களால் காட்சியிழந்த
நானும் கண் திறந்து பார்த்து கொள்கிறேன்....

பெண்ணே உன்
இதயத்தை திறந்து விடு
உன் இதயத்தில் சிறைபட்ட
நானும் சுதந்திரமாய் சுற்றி பார்க்கிறேன்....

பெண்ணே உன்னோடு
சேர்த்துகொள் என்னை
நானும் சில நாள் உயிரோடு வாழ்ந்து பார்க்கிறேன் உன் அரவணைப்பில்....

No comments:

Post a Comment