Tuesday, February 21, 2012

காதல் கொடிது....காதல் கொடிது.....

காதல் கொடிது....காதல் கொடிது.....
கற்பனை செய்தே காலம் கழியும்.....
காதல் கொடிது....காதல் கொடிது.....

விரதம் தின்னும்....விரக்தியும் தின்னும்.....
விதையும் தின்னும்....விந்தையும் தின்னும்.....

உன்னையும் தின்னும்....என்னையும் தின்னும்....
இந்த மண்ணை போல...
உன்னையும் தின்னும்....என்னையும் தின்னும்....

விண்ணும் மண்ணும் விரல் தொட்டாலும்....
விழியில் விண்மீன் ஒளி பட்டாலும்......

நெஞ்சம் உன்னை தேடுமடி....
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடுமடி.....

கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன்...
உன் கனவு மட்டும் போதுமடி....
அது தினமும் தினமும் வேண்டுமடி......

கனவில் தினமும் நீ வந்தால் போதும்....
என் காயம் யாவும் ஆறுமடி....
என் காயம் யாவும் ஆறுமடி
....

No comments:

Post a Comment