Wednesday, May 18, 2011

என்னையறியாமல் திருடியவளே....



பக்குவமாய் பத்திரப்படுத்திய
என் இதயத்தை என்னையறியாமல் திருடியவளே....

உன்னை பார்த்த நிமிடத்தில்
உன் மேல் காதல் கொள்ளவில்லை...
...பழகிய தருணங்களிலும் ஆசை வரவில்லை...
வந்த நொடியும் அறியவில்லை..
இப்போது நானும் நானாக என்னிடத்தில் இல்லை...

உன்னை மட்டும் நினைக்க வைத்தாய்...
உன்னையே நினைத்து உருக வைத்தாய்...
மணிக்கணக்கில் என்னுடன் உரையாடி சென்றாய்...


"என் காதலை உன்னிடத்தில் சொல்ல
நீ நாணத்தில் முகம் சிவக்க
வார்த்தைகள் எல்லாம் தடு மாற
இருவரும் இன்பமாய் இணைவோமே.."
என்ற கனவுடன் வாழ்ந்தேன்...

அவளோ டைம் பாஸ் க்காக
பழகி இருக்கிறாள் ...
என் மனதோடு கண்ணாமுச்சி ஆடிஇருக்கிறாள்....

உன் விழி வழியே முதலில்
காதல் அம்பு எய்தவள் நீதானடி...
மையிட்டு மயக்கும் உன் மயக்கப் பார்வையின் போலி இந்த பைத்தியக்காரன் அறியவில்லயடி...
உன் பாசத்தில் உள்ள வேஷம்
மனசுக்கு புரியலயேடி...
என் உயிரோடு விளையாட உனக்கு விருப்பமடி....
என் உறவே உயிராக எனக்கொருவள் வருவாளேடி...
என் அன்பு உனக்கு புரியலடி..
உனக்கு புரியும் போது என்னை புரிந்து கொள்ள என் கனவு தேவதை என்னவள் இருப்பாளடி...

No comments:

Post a Comment