வானமான என் மனதில்
வந்து போகும் பெளர்ணமி நீ
உருண்டு திரளும் மேகமாய்
உன் நினைவு எனக்குள்
அணைத்துக்கொள்ள ஆசையில்லை
விலக்கிச் செல்ல மனமும் இல்லை
உன் நினைவை கலைத்துவிட
நினைக்கும் போதெல்லாம்
காற்றோடு கரைந்து செல்வது
காலங்கள் மட்டும் தான்
விடையில்லாக் கேள்விகள்
தினமும் என்னுள்
விண்ணைத்தொடும் அளவுக்கு
தொலைவில் உள்ளவனே
உன்னை தொலைத்துவிட
நினைத்து நானே
தொலைந்து போகிறேன் உன்னுள்...(தனா).
No comments:
Post a Comment