Sunday, May 29, 2011

உனக்கு தெரியுமா?????

உன் புகைபடத்தையும்..,
என் புகைப்படத்தையும்..
வெட்டி ஜோடியாக ஒட்டி ரசித்தது
உனக்கு தெரியுமா..?

உன் பெயரோடு ..,
என் பெயரை ..,
இணைத்து எழுதி இன்பத்தில் தவழ்ந்தது
உனக்கு தெரியுமா..??

உன் மேலுள்ள காதலினால்..,
என் கையை வெட்டி..,
ரத்தத்தில் கவிதை வடித்தது
உனக்கு தெரியுமா..???

இவை எதுவுமே தெரியாத உனக்கு..
என் காதலின் ஆழம் மட்டும் எங்கே
தெரிய போகிறது..,
என்னை-உணரமுடிந்த உன்னால் தானடா ..,
என் காதலையும் உணர முடியாமல் போனது..,

No comments:

Post a Comment