Thursday, September 22, 2011

"என் காதலியே முதல் குரு"

கல்லாத
கலையையும்
கற்கவைத்தாள்...
சொல்லாத
சொற்களையும்
சொல்லவைத்தாள்...
நினையாத
நினைவையும்
நினைக்கவைத்தாள்...
பேசாத மொழிகளையும்
பேசு என்று
பேசவைத்தாள்...
பாதம் படா
பாதையிலும்
பயனிக்கவைத்தாள்...
வெள்ளமுடியா
வெற்றியையும்
வெள்ளவைத்தாள்...
காணாத
கவலையையும்
காணவைத்தாள்...
வாழாத
வாழ்க்கையையும்
வாழவைத்தாள்...
வாழ்க்கை என்றால்
என்ன என்று
கற்றுத்தந்தாள்...
ஏன்.
ஏமாற்றத்தை கூட
நான் உணரவேண்டி
என்னை ஏமாற்றிசென்றவள்...
இப்பொழுதாவது சொல்லுங்கள்
என் முதல் குரு அவள் தானே...!

No comments:

Post a Comment