Wednesday, September 14, 2011

உனக்கு நான் யாரோ தான் !


நான் கல்லறைக்கு சென்றால்தான்
நீ _ என்னை காதலிப்பாயா ! இல்லை
நான் மரணமேடைக்கு சென்றால்தான்
நீ _ என்னை மணமுடிபபாயா !

...
உன் தாய்தந்தை மேல் அன்பும்
பாசமும் உண்மையாக வைத்தாயா !
உன் உடன் பிறப்புகளுடன்
உண்மையான பிரியம்காட்டினாயா !
உன் சகோதரிகளுடன் சகசமாக
பேசி சந்தோசபட்டயா !

என்மேல் அன்பு இல்லாத
உன்னிடம் அன்பு காட்டியது
என் தவறா ?
பண்பு இல்லாத உன்னிடம் நான்
பாசம் காட்டியது என் தவறா ?

ஆனால்........

காசு பணத்தை எதிர்பார்க்கும்
உன்னை நான் காதலித்ததுதான் தவறு !
உண்மை காதலே தெரியாத
உன்னை கட்டிபிடிததுதான் தவறு !
என் முகத்தையே பார்க்கபிடிக்காத
உன்னை முத்தம்மிட்டதுதான் தவறு !
மனசாட்சி இல்லாத உன்னை
நான் மணமுடிக்க நினைத்ததுதான் தவறு !

நினைவுகள் கூட இல்லாத உனக்கு
நிழல் எப்படி சொந்தமாகும் ?
கனவுகள் கூட இல்லாத உனக்கு
காதலும் கற்பனையும் எப்படி
சொந்தமாகும் ?
மனசாட்சி இல்லாத உனக்கு
மணமேடயும் மகிழ்சியும் எப்படி
சொந்தமாகும் ?

தோப்பிலே இருந்தாலும்
மரம் தனியாகத்தான் இருக்கும் !
நான் எங்கு இருந்தாலும்
என் நினைவுகள் எல்லாம்
உன் நினைவாகத்தான் இருக்கும் !

கன்னட.... கன்னட......
இடங்களில் மலரும்
காட்டு மலர் அல்லடி !
காதல் .........
உணர்வுபூர்வமான
உள்ளங்களில் மலர்வதுதான்டி
உண்மையான காதல் !
நேசிக்க தெரியாத
யேசிக்க தெரியாத- உனக்கு
உண்மையான காதல்
நீ தொடமுடிய தூரம்தான் !

நீ என்றும் என் காதலியாக இருப்பாய்
ஆனால் உன்னை பொருதவரெயில்
உனக்கு நான் யாரோ தான் !

No comments:

Post a Comment