Saturday, December 10, 2011

வலியும், வேதனையும்

அடிக்கு அடி.
உதைக்கு உதை.
மேற்கூறிய தண்டனை
காதலுக்கும் வேண்டுகிறேன்...
காதலுக்கான காத்திருப்புகளையும்,
பதிலுக்கு ஏங்கிடும்
பரிதவிப்புகளையும் ,
தனிமையில் கொன்றிடும்
அவஸ்தைகளையும்,
நீயும் அனுபவிக்க வேண்டுமடி..
அப்போழுதாயின் தெரியும் அல்லவே
காதலனாய் நான் ஏற்றிருக்கும்
பாத்திரத்தின் வலியும், வேதனையும்....


No comments:

Post a Comment