Monday, December 12, 2011

உண்மை அன்பினை நீ உணரும் வேளை........!!!

கவிதை சொல்லி
காதல் செய்து
காதலை எண்ணி
கண்ணீர் விட்ட காலம்
மாறி.......

அரட்டையடித்து
அலும்பு பண்ணி
தேதி குறித்து
திகட்டிவிடும்போது
கழற்றிவிட்டு செல்லும்
கலியுகம் இன்று......

காதல் என்பது
கண்ணாய் எண்ணி
இன்பம் கண்ட காலம்
மாறியின்று
இன்பம் மட்டும் கண்டுவிட
காதல் கொள்ளும்
கலியுகமிது......

போதும்
புரிந்திடு மானிடா
சிற்றின்பம் தாண்டியொரு
பேரின்பம் உண்டு
உண்மை அன்பினை நீ
உணரும் வேளை........

No comments:

Post a Comment