Tuesday, December 13, 2011

அம்மா

 என் வாடிய
முகம் கண்டு...
பதறி போகும் - நீ
சோத்துடன் பாசத்தையும்
சேர்த்து பிசைந்து
ஊட்டும் போது...

அமிர்தத்தின் "சுவை" கூட...
தோற்று போகும்
உன் கை "பக்குவம்" கண்டு!

நீ என் தலை கோதி...
புன்சிரிப்புடன்
உன் மடியில் என்னை...
தூங்க வைக்கும் போது...

சொர்க்கத்தின் "இன்பம்" கூட...
தோற்று போகும்
உன் தாய்மையின்...
"இன்பம்" கண்டு!

என் பயம் போக்க...
நீ என்னை அனைத்து
அரவணைக்கும் போது...

கடவுளின் "கருணை" கூட...
தோற்று போகும்
உன் தாய் பாசத்தின்...
"கருணை" கண்டு!


No comments:

Post a Comment