Wednesday, June 1, 2011

மதியாதார் வாசல் !

உன்னை மதிக்காதவரை - இன்னும்
நீ மதிப்பதுதான் நல்ல இழிவு !
அறிவுரை தருவோர் ஆயிரம் - இன்னும்
அவர்கள் மட்டும் விதிவிலக்கு !
பட்டவனுக்குத்தான் வலியின் அளவு - இன்னும்
புத்தி சொல்பவன் பட்டால் தெரியும் !
மதிக்காதவரை என்றும் மிதிக்காதே - இன்னும்
மானமுள்ள மனிதர்கள் ...................
இந்த மண்ணில் இருக்கும்வரை !
மதியாதார் வாசல் மிதியாதே !!

No comments:

Post a Comment