Sunday, June 5, 2011

எதை உன் காதல் என்கிறாய்...................

உனக்காக எல்லாம் செய்த எனக்கு

என்ன செய்தாய் என்று யோசித்தால்

வெறுமை வருகிறது பதிலாக

உயிராக நினைத்தாயா என்னை

என் காதலை கவிதையாக படித்தாயா

ஒரு முறையேனும் காத்திருந்தாயா

உறக்கம் தொலைத்து தவித்து இருக்கிறாயா

எந்த காதல் சுவடும் இல்லை

இருந்தும் காதலிக்கிறேன் என்கிறாய்

முதலில் சொல் எதை காதல் என்கிறாய்

உனக்காக நான் எதையும் எனக்காக

நீ எதையும் செய்யும் மனமே காதல்

No comments:

Post a Comment