Wednesday, June 1, 2011

நெஞ்சறுத்து போனாயே....

சிந்திய வார்த்தையில் சிதைச்சிட்ட
என் உயிரிலே விஷத்தை கலந்திட்ட
இதயத்தில் இடியை
நீ இறக்கிட்ட...

அடிக்கிற காற்றில் கரையிறேன்
அட அமிலத்தில் நானும் எரியுறேன்
நினைவிலே தினம் தினம் இறக்கிறேன்

பூவப்போல நீயும்
என் கண்ணில் வந்து போனாயே
முள்ளைப்போல இப்போ
என் கண்ணக்குத்தி கெடுத்தாயே

ஊருக்குள்ள உன்னை மட்டும்
நானும் இங்கே நம்பிருக்க
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
நெஞ்சறுத்து போனாயே!!!

No comments:

Post a Comment