அன்பு மட்டும் கற்று கொடுத்த கடவுள் !!!!

தாயே !!!
உன் அன்பை பெற்ற நான் உரைக்கின்ற
உண்மை மொழிகளிது .......
உன் அன்பை,,,
கூற வார்த்தை இல்லை என்றாலும் .....
எனக்கு தெரிந்த வார்த்தைகளையே , மீண்டும் ,
உன் பாதத்திற்கு சமர்பிக்கிறேன் ......
உலகில் வாழும் அனைவருக்கும் ,,
உறவுகள் உயிரை இருப்பதில்லை !..
ஆனால் ,
உயிரையே கொடுத்து அந்த உயிருக்காக
வாழும் உன்னத படைப்பு நீ !!!
நீ மட்டும் தான் ..........
சொந்தங்கள் பல தோன்றிடும்
இனிமையாய் சில நேரங்களில் பேசிடும் ....!
ஆனால் ... !
உண்மையிலேயே!!!!!!!
நான் பெருமையை சொல்லிகொள்ளும் ,
எனக்கு சொந்நதமான உறவு நீ மட்டும்!!!!!
என் நினைவுகள் .......
அனைத்தும் உன்னை நோக்கியே இருக்கும் ......
கடவுளின் வடிவமல்ல தாய் .......
கடவுளால் அனுப்பப்பட்ட அவள் .....
படைப்பில் பிரம்மா!!!
அன்பில் பார்வதி !!!
அறிவில் சரஸ்வதி !!
அழகில் மகாலட்சுமி !!!
என் தாயே !!!
உன்னை போற்றிட எனது இரு
கனங்கள் போதாது,
உன் அன்பால் கலந்து எனக்கு நீ ஊட்டிய உணவு ..
உன் கருணையால் உருவான ,
உன் உடலால் எனக்கு நீ போர்த்திய போர்வை !!!!
என்னை காக்க வேண்டும் என்ற காரணத்தால் .....
பூமா தேவியே பொறுமை இழக்க ,,,
பொறுமையாய் நடந்த உன் கால்கள் ......
இவை அனைத்தும் .....
அப்போதே எனக்கு புரிந்திருந்தால் ,,,,,
இந்த இருட்டான உலகில் வந்து பிறந்திருப்பேனா !!!
என் உலகமே நீதான் என்று ,
தெரியாத நிலையில் தான், இவ்வுலகை
காண பிறந்துவிட்டேன் ....
அவசர அவசரமாய் !!!
வரம் கொடுக்க கடவுள் வந்தால் கூட .......
எனக்கு கிடைத்த பெரிய வரம் ...
நீ இருக்கும் போது, வேறென்ன,
கேட்டு விடப் போகிறேன் ...
உன்னை விட பெரிய வரம் இல்லை என மகிழ்கிறேன் ....
உன் அன்பின் பயணம் முடியாத போது என் வார்த்தையின் அளவும் குறையாது !!!
என்றென்றும் எனக்காக வாழும் உன் எண்ணங்களுக்கு ......
செயல்களுக்கு ....
உணர்வுகளுக்கு ... கடமைகளுக்கு ...
நன்றி !!!! நன்றி !!!!! நன்றி !!!!!!
No comments:
Post a Comment