Monday, June 6, 2011

தமிழனாய்ப் பிறப்பதற்கே

என் இனிய தமிழ் நண்பா!
"எத்தனை தவம் செய்து,
தமிழனாய்ப் பிறந்தனை "
என்பதை அறிவாயோ?
தவப் புதல்வனே,
தரணியில் நிறையும்
அவப்பெருக்கை .....
அன்புப் பெருக்கால். பண்புப் பெருக்கால்,
அறிவுப் பெருக்கால், ஆற்றலின் பெருக்கால்,
தடயம் சிறிதும் இன்றி ....நீக்குவாய்!
ஆக்குவாய் அகிலத்தை,
அன்பிற்கு உறைவிடமாய்....
அமைதியின் பொலிவிடமாய் ......!

No comments:

Post a Comment