Wednesday, November 16, 2011

ஒவ்வொரு பிகரும் தேவை மச்சான்....

கண்ணால் பல கவிதைகள் பேசுவாள்
கண்ணகி ஒருத்தி ,
மந்தாரமாய் மனதை வருடி செல்வாள்
மாதவி ஒருத்தி,

வானவில் வண்ணமாய் எண்ணத்தில் ஓடுவாள்
வானதி ஒருத்தி,
நடைதனில் நளினமாய் இடையினை ஆட்டுவாள்
நந்தினி ஒருத்தி,

ரம்யமாய் நம்மை ரசிக்க வைப்பாள்
ரம்பை ஒருத்தி,
ஊமை நெஞ்சினில் ஊசி ஏற்றுவாள்
ஊர்வசி ஒருத்தி ,

மேகமாய் வந்து தாகமூட்டுவாள்
மேனகை ஒருத்தி,
தாகமேற்றியே தண்ணி காட்டுவாள்
தாரகை ஒருத்தி,

ஓரப் பார்வையில் ஒளிதனை ஏற்றினாள்
ஓவியா ஒருத்தி ,
கள்ளச் சிரிப்பினில் கலவரமூட்டினாள்
காவியா ஒருத்தி,

மோகப்பேய்போல் மூர்சையாக்குவாள்
மோகினி ஒருத்தி...
காமத்தீயினில் கலவரமூட்டுவாள்
காமினி ஒருத்தி,

தேனிலும் மேவிய தீம்சுவை போன்றவள்
தேன்மொழி ஒருத்தி ,
பூவிலும் மெல்லிய பாரமும் தாங்கிடா
பூங்கொடி ஒருத்தி,

காதலியை மட்டும் நித்தமும் நினைத்து
பித்தம் ஏறி பிதற்றுவதை விட ......
காணும் மங்கையர் எழில்கண்டு கவிதைகள் புனையும்
கவிஞனாய் வாழ்ந்துவிடுவதே என்றும் சிறப்பு !

ஆதலால் வைக்கப்பட்டது இந்த தலைப்பு........

+++++===== ஒவ்வொரு பிகரும் தேவை =====+++++
----------------------- மச்சான் ----------------------


No comments:

Post a Comment