Saturday, November 19, 2011

அம்மா .......................

அம்மா

என் இதய அறை நான்கு என்று சொன்னாய்,
அதில் நீ எவ்வறை என்று சொல்ல தவறியதேன்..

நூறு கிராம் எடையுள்ள என் இதய வீட்டில்,
நூறு கோடி ஆண்டுகள் வாழ்ந்த தேவதை நீயோ..

நீ ஊட்டிய பிடி சோற்றில் ஊரிய என் உடல்குருதியின் ஒவ்வொரு செல்களும்,
உன் மணிமண்டபத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகள் தானே!,..

நீ செய்த பழயசோறு..
நித்தம் ஒருமுறை , ஊட்டிவிட நீ..

உறங்க நான்..
ஊமை கதை சொல்ல நீயும் , உன் மடியும்......

No comments:

Post a Comment