Tuesday, November 8, 2011

எனது கவிதை

என் கவிதையை படிக்க நான் யாருக்கும்

அனுமதி தந்ததில்லை

ஏனெனில் என் காதலுக்கு சொந்தக்காரர்கள்

யாரும் இல்லை

ஏட்டை நிரப்பிவிட்டு சாய்ந்து விடுவேன்

ஒரு ஓரமாய்

திருட்டு தனமாய் அவள் வந்து படிக்கிறாள்

தென்றலோடு கலந்து

காவலுக்கு முள் செடி ஒன்றை வளர்த்தேன்

அவள் வந்து தொட்டதால் அது ரோஜாவாக

மாறியது

இப்படிக்கு

என் நிலையை படு மோசமாய்

சில சமயங்களில் தர்ம சங்கடமாய்

என்ன செய்வேன் பலமுறை யோசித்தேன்

திடீரென்று தோன்றியது இந்த யோசனை

என் காதலை காவலுக்கு வைத்தேன்

அவள் நட்பு போர்வை போர்த்த மறுபடியும்

வந்தாள்

நொந்துவிட்டது என் மனம்

முடிவில் சொல்லிவிட்டேன்

என் கவிதையை நீ வாசிக்க வா

ஆனால் அதற்கு முன் என்னை சுவாசித்து விட்டு

போ என்று

வரவேயில்லை அவள்

ரோஜாவும் வாடிவிட்டது

முள்ளும் காய்ந்துவிட்டது

என் பக்க்ங்கள் மட்டும்

அவள் விரல் பட்டு விலக இன்னும்

No comments:

Post a Comment