Tuesday, November 15, 2011

உலகமே விரும்பும் உயிர் நீ.

அழகானவனே
என் இதயத்தை திருடியவனே
உன் அருகில்
உலக அழகனே நின்றாலும்
எனக்கு நீதான் அழகு.

நீ இல்லை என்றால்
அந்த இடமே நரகம்.

நீ இந்த உலகில் இல்லை எனில்
பூமா தேவியே உலகை அழிந்து விடுவாள்.

உன் பதம் படவில்லை என்றால்
பூமி உள்ளே சென்று விடு.

உன் பார்வை கிடைக்க வில்லை என்று
பல பறவை கூட்டம் தற்கொலை செய்து கொண்டது,

அழகான மயில்கள் எல்லாம் வரம்
இருந்து உன் கண் இமைகளில்
தன் மயில் ரங்கைகளை வளர்த்து கொண்டது.

உன் குரல் கேட்டு குயில் கூட்டம்
பாடுவதை நிறுத்தி விட்டது.

வண்டு கூட்டம் உன்னை சுற்றி வந்தது
அழகான ரோஜா நீ என்று.

தென்றலும் உன்னை தேடி வந்தது
உன் அழகான மேனியே திண்டி சென்றது.

உன்னை பார்க்காதவர்கள் இருபதல்தான்
என்னிடம் போட்டிக்கு ஆள் குறைவு
பார்ந்து விட்டால் உன்னை அடைவது கஷ்டம்.

நீ எனக்கு மட்டும் கிடைச்ச பொக்கிஷம்
மறைத்து வைத்து கொள்றேன் உன்னை.

எனக்கு கிடைக்க வில்லை என்றாலும்
உன்னை விடு தர மாட்டேன்.

உலகமே விரும்பும் உயிர் நீ.
எனக்கு மட்டும் கிடைக்குமா

No comments:

Post a Comment