Tuesday, November 29, 2011

அம்மா....

என்னை
கருவாக கருவறையில்
தாங்கியவள்

நடக்கும்வரை தோள்களில்
தாங்கியவள்

குடிக்கும்வரை மார்பினில்
தாங்கியவள்

உறங்கும்வரை மடியினில்
தாங்கியவள்

அம்மா...

இதுவரை என்னை
உயிராய் தாங்கிய உன்னை
இனி நான் என் கைகளுக்குள்
வைத்து தாங்குகிறேன்

அம்மா...

எனக்கு இது ஒன்றும் சுமையாக இல்லை
காரணம்
இந்த கைகளும் நீ கொடுத்தவை தான்

அம்மா....


No comments:

Post a Comment