இடம் இல்லை போய் விடு...!
மலரே முள்ளை வெறுக்காதே..!
உன்னைப்போல் அதற்கு
முத்தமிட்டு காதல் சொல்லத் தெரியாது..!
உன்னை குத்தியே தன் காதலை சொல்லும்..!
வண்டுகளை புரியத் தெரிந்த உனக்கு ஏன் உன்
புன்னகையை விரும்பும் முட்களை
புரிந்து கொள்ள முடியவில்லை..?!
இனி என் காதல் கவிதைகளில் உனக்கு
இடம் இல்லை போய் விடு...!
No comments:
Post a Comment