Sunday, October 9, 2011

உண்மை காதலடி கண்ணே....!!

வெண்மதியை
நான் வெறுத்தேன்
தேய்ந்திவிடும் வெண்ணிலவை
தேயா உன்னுடன்
ஒப்பிட்டதால்....


வானவில்லை
நான் வெறுத்தேன்
உன் வண்ண
அழகுதனை
நிரந்தாரமில்லா
அதற்கு ஒப்பிட்டதால்...


பூமியை நான்
வெறுத்தேன்
பொறுமையின்
இலக்கணமான
உன்னை
பூமிக்கு ஒப்பிட்டதற்காக......


பூவிதழை நான்
வெறுத்தேன்
வாடிவிடாதுன்னழகை
பூவாக
வர்ணித்ததனால்.....



பெண்ணே
உன்னை வர்ணிப்பதை
விரும்பியும்
அவை உன் உண்மை
அன்பிற்கு
ஈடானதல்ல
என்றுணர்ந்த
என்னையா
பெண்ணே நீ
உண்மையாகவே வெறுத்துவிட்டாய்.....?


மரணிக்க
துடிக்குமென் உள்ளம்
மறுக்கின்றது
மரணத்தை
ஏற்றுவிட.....



அன்பே
என் மரணம்
உன்
வாழ்க்கையின்
இன்பங்களை
நிலைகுலைத்துவிடும்
என்பதனால்......


காத்திருப்பேன்
பெண்ணே
உன்
வருகைக்காக
அல்ல
வாழ்வில்
இன்பமாய்
வாழ்வதை
ரசிப்பதற்காக......


என்
காதல்
ஏழைக் காதல்தான்
அன்பே
இருந்தபோதும் - இது
உண்மைக்காதலடி கண்ணே......!!

No comments:

Post a Comment