Thursday, October 20, 2011

என்னவள் !!

தென்றலில் அசைந்தாடும் நாணலாய்
உன் தலை முடி

தென்றலின் வருடலாய்
உன் தீண்டல்

ஏழு சுவரங்களுக்கு பெருமை சேர்க்க
எட்டாவது சுவரமாய் உன் மௌனம்

பார்வை பறிக்கும் மின்னல்களுகிடையில்
என் மனதை பறிக்கும்
உன் மின்னல் பார்வை

புது இசை படைக்கும்
உன் கை கோர்த்து நடந்த
என் நடை பயணம்

நான் கண்ணாடி பார்கையில்
உனக்கென பிறந்ததாய் ஓர் உணர்வு

உன் உலகம் நானாய்
என் அனைத்தும் நீயாய்

வாழவேண்டும்.

நான் இறப்பது உன் மடி என்றாலும்
நான் வாழ்வது உன்னுடன் இல்லை என்றாலும் வரவேற்பேன் மரணத்தை
இருகரம் நீட்டி


No comments:

Post a Comment