Friday, October 14, 2011

காதல் ஒரு போதை தானடா

அது ஒரு சாபம் அழகிய சாபம்

இனிக்கும் சோகம் காதல் ஒரு சோகம்

கவிதையாய் தொடங்கும் கல்லறையில்

முடியும்

விழிகளால் வசியம் தொடங்கும் ஒரு விஷம்

கவிதையாய் பேசி நீ தொலைந்திடும் தோஷம்

முடியும் வரை தெரியாது

உன்னை முடிக்கும் வரை ஓயாது

புன்னகை மறந்து போகும்

மனம் தனியே பேசும் எதை பார்த்தாலும்

வீசும் விட்டு சென்ற காதலின் வாசம்

உன்னை உனக்கு வெறுக்க பிடிக்கும்

உயிரை விசிறி எரிய பிடிக்கும்

தாடி வச்சு அலைய பிடிக்கும்

காதலரை பார்த்தால் கோபம் வெடிக்கும்

தலையில் அடித்து கொண்டு சிரிக்கும்

காதல் ஒரு போதை தானடா

தீர்ந்து போகும் பானம் போலடா

No comments:

Post a Comment