Saturday, October 8, 2011

அழ (வைக்கும்) கு காதலி"

விளக்கில்லா வீட்டில்
விட்டில் பூச்சி..
என் இதயத்தில் உலவும்
நீ.....

கருப்பு கனவில் பூக்கும்
வெள்ளை ரோஜா
நீ.....

எனக்கு வாழ்வை தருவதும்
என்னிடம் வாழ்வை பெறுவதும்
நீ.....

நான் நிற்கும் இடத்தில்
நீ இல்லை என்றாலும்
என் நினைவெல்லாம் நீ தான்....

நான் உன்னிடம் பேசவில்லை,
ஆனாலும் உன்னைப்பற்றி பேசாமல் இல்லை...

சில நேரங்களில் வாழ்க்கையில்
தடுமாறி விழும் போது என்னை எழ வைத்தாய்,
பின்பு பிரிவை பரிசாக தந்து ஏனடி
என்னை அழ வைத்தாய்..!

No comments:

Post a Comment