காதல் வாழும்.............
உற்றுப் பார்த்துவிட்டு
உதறிவிட்டாய் - நான்
செத்துபோகும் போதாவது
சிந்திப்பாயா என்னை.
கற்றுக்கொண்டுவிட்டேன்
காதலை நின்னால்- அதை
விற்றுப் பிழைப்பதற்கு
நான் செத்தே போகலாம்.
காற்றும் என்னில் மோத, அது
காதல் செய்ய வேண்டும்.
நேற்றே நானிறந்து போனால்
காற்றின் காதல்கூட தோல்வி
ஊற்றாய் பேசும் நீயும்
சேற்றை வாரி இரைத்தாய்
காற்றை அணைத்து நானும்
என் கனவை மறந்து பறந்தேன்
தேற்ற வேண்டிய நீயே -என்னை
தெரியாதென கை விரித்தாய்
தோற்றே போனேனோ நானும்
தோற்றாலும் என் காதல் வாழும்.
No comments:
Post a Comment