Wednesday, October 26, 2011

நீ தூவிய காதல் விதை மண்ணில் விழுந்திருந்தால் பிழைத்திருப்பேன்....

நீ தூவிய காதல் விதை
மண்ணில் விழுந்திருந்தால்
பிழைத்திருப்பேன்....
கண்ணின் மணியில் விழுந்து விட்டதே..
கண்ணீர் வார்த்து விளைந்தும் விட்டதே...
இப்போது பிடுங்கி எறியச்சொன்னால்
என்ன செய்வேன்?
கண்ணீரோடு கலந்து ரத்தமும் வருகிறதே...
இது உடலில் ஏற்பட்ட ரணமில்லையே..
ஆறிவிடும் என உதறித்தள்ள...
உள்ளத்தில் ஏற்பட்டு விட்டதே...
இது உயிரில் வலிக்கிறதே...
உயிரை விட்டு விடவா?
என் நேசம் உனக்கு
சந்தோசம் தந்ததோ இல்லையோ
எனக்கு தெரியவில்லை...
இனிமேலும் என் வேதனை
உன்னை வேதனை படுத்த வேண்டாம்..
மறைக்கத் தொடங்குகிறேன்...
என் வேதனையை மட்டுமல்ல....
உன் வெறுப்பிற்கு பயந்த
என் நேசத்தையும் தான்...
மறைக்கத்தான் முடியும் என்னால்...
மறக்க முடியாதே...

No comments:

Post a Comment